News September 15, 2024
அண்ணா பிறந்தநாள் விழா: நிர்வாகிகளுக்கு அழைப்பு

பேரறிஞர் அண்ணாவின் 116ஆவது பிறந்தநாள் விழா, செஞ்சி அடுத்த அப்பம்பட்டில் நாளை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு, அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிகழ்வில், அனைத்து திமுக நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டுமென ஒன்றிய செயலாளர் விஜயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News September 19, 2025
விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.19) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
▶️கரும்பு திருமண மண்டபம், விழுப்புரம்
▶️ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், பிடாகம்
▶️பஞ்சாயத்து அலுவலக வளாகம், பரனூர்
▶️VPRC கட்டிட வளாகம், செண்டூர்
▶️VPRC கட்டிட வளாகம், சாலவாடி
▶️ராமானூஜர் திருமண மஹால், பல்லரிபாளையம், சித்தலிங்கமடம்
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
News September 18, 2025
நலமான பெண்கள் வளமான குடும்பம் மருத்துவ முகாம்

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று முதல் அக்டோபர் 2 ஆம் தேதிவரை ‘நலமான பெண்கள் வளமான குடும்பம்’ என்ற சிறப்பு மருத்துவ முகாம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
சிறுவாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இன்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கலந்து கொண்டு மகளிருக்கு சுகாதார பெட்டகங்களை வழங்கினார்.
News September 18, 2025
மலை குன்றில் சாராயம் காய்சியவர் கைது

விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோ.குப்பம் கிராமம் நந்தன் கால்வாய் அருகே மலை குன்றில் சாராயம் காய்ச்சுவதற்காக 20 லிட்டர் அளவு கொண்ட ஊரல்களும், 2 லிட்டர் சாராயம் மற்றும் வெள்ளம் ஆகியவற்றை வைத்திருந்த சோ.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரை போலீசார் இன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.