News March 20, 2026
அண்ணா நகர் சொத்தை இழந்த விஜய்!

சென்னை, அண்ணா நகரில் உள்ள தனது சொத்தை விஜய், ₹35 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக The Week நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், சில சொத்துக்களையும் அவர் விற்க முயன்று வருகிறாராம். விவாகரத்து வழக்கில் அடுத்த மாதம் 20-ம் தேதி அவர் ஆஜராகும்போது, சொத்து விவரங்கள் கணக்கீடு செய்யப்படும் என்பதற்காகவும், பேரவைத் தேர்தல் செலவுக்காகவும் அவர் தனது சொத்துக்களை விற்கத் தொடங்கியுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.
Similar News
News March 29, 2026
திமுக கூட்டணியை விமர்சித்த விஜய்க்கு அமைச்சர் பதிலடி!

கிழிந்த துணியை தைத்து வைத்த மாதிரி திமுக கூட்டணி உள்ளது; அது ஒரு ஒட்டுப்போட்ட கூட்டணி என விஜய் விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய அன்பில் மகேஸ், வெறும் துணி இருந்தால் அதில் எந்த பயனும் இல்லை; துணியை ஒட்டுப்போட்டு தைத்தால் தான் சட்டை அழகாக இருக்கும், அது தான் திமுக கூட்டணி என கூறியுள்ளார். திருச்சி திமுகவின் கோட்டை என்பதை வரும் தேர்தல் நிரூபிக்கும் எனவும் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>
News March 29, 2026
கேஸ் சிலிண்டர்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தாலும் மக்களிடம் பதற்றம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், எரிபொருள் விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக இன்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை 20% – 50% வரை உயர்ந்தாலும், இந்தியாவில் விலை உயர்வு இருக்காது என்றும் உறுதியளித்துள்ளார்.
News March 29, 2026
மாமனார், மாமியாருக்கு மருமகள் ஜீவனாம்சம் தரணுமா?

கணவன் மறைவுக்கு பின்பும் மாமனார், மாமியாரை கவனித்து கொள்ளும் மருமகள்கள் உண்டு. ஆனால் அது சட்டப்பூர்வ கடமையா, கணவனின் பெற்றோருக்கு மருமகள் கட்டாயம் ஜீவனாம்சம் அளிப்பது குறித்து குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், மகனை இழந்த முதிய தம்பதி, மருமகளிடம் ஜீவனாம்சம் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். தார்மீக கடமையை சட்டப்பூர்வ கடமையாக செயல்படுத்த முடியாது என்று ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்தது.


