News February 28, 2025
அண்ணாமலை பரப்புவது தவறான தகவல்

அண்ணாமலை பரப்புவது தவறான தகவல் என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்திற்கு 66 உயிர்களை பலிகொண்ட வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் சாராயம் காய்ச்சியதாக மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கூட கண்காணிக்காமல் மாவட்டக் காவல்துறை செயல்படுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.
Similar News
News April 8, 2026
சங்கராபுரம்: டீ போட்டு வாக்கு சேகரிப்பு!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம், ச. செல்லம்பட்டு கிராமத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், சங்கராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் தா.உதயசூரியன் ஒரு டீக்கடையில் டீ ஆற்றி பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில், கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்களும் திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.
News April 8, 2026
கள்ளக்குறிச்சி அருகே வாலிபர் தற்கொலை!

கள்ளக்குறிச்சி: மோ.வன்னஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் குமார்(28). இவருக்கும் கலைவாணி(28) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கலைவாணி வேலையில் இருந்து நின்றார். ஆனால், அவருக்கான போனஸ் தொகை ரூ.12,000 பணத்தை நிறுவனம் தராததால் மனமுடைந்த சங்கர் குமார், நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News April 7, 2026
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து EPS பிரச்சாரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பரப்புரை மேற்கொண்டார். இதில், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் மற்றும் திருக்கோயிலூர் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.


