News February 18, 2025
அணைக்கட்டு அருகே 100 லிட்டர் கள்ளச்சாரயம் ஊரல் அழிப்பு

வேலூர் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை சுற்றியுள்ள மலைப்பகுதியில் நேற்று (பிப்.,17) சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பேரலில் 100 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அங்கேயே ஊற்றிய அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 21, 2025
உயிர் நீத்த காவலர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (அக் -21) காவலர் வீர வணக்கம் நாளை முன்னிட்டு பணியின் போது உயிர் நீத்த காவல்துறை சேர்ந்தவரின் வாரிசுகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் நியமன பணி ஆணையினை வழங்கினார். உடன் மாவட்ட காவல் அதிகாரிகள், உயிர்த்தியாகம் செய்த காவலர்களின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
News October 21, 2025
வேலூர்: ஒரே நாளில் 20 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்!

தீபாவளி பண்டிகையொட்டி பொதுமக்கள் பலர் கடந்த 2 நாட்களாக பட்டாசுகள் வெடித்து வருகின்றனர். இதனால் சாலைகள், தெருக்களில் பட்டாசு குப்பைகள் குவிந்தது. இதையடுத்து வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று (அக்.21) ஒரே நாளில் 20 டன் பட்டாசு குப்பைகளை அகற்றியுள்ளனர் என திகரிகள் தெரிவித்தனர்.
News October 21, 2025
வேலூர்: 7 கோடியை 66 லட்சத்திற்கு மது விற்பனை!

தீபாவளி பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள 104 கடைகளில் நேற்று 7 கோடியே 66 லட்சம் ரூபாய்க்கு மது பானங்கள் விற்பனையானது. என டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.