News November 19, 2025
அட்ஜஸ்ட்மென்ட் சர்ச்சை: நடிகை மான்யா ஆனந்த் முற்றுப்புள்ளி

தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் எனக் கூறி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு <<18320110>>அட்ஜஸ்மென்ட்<<>> பற்றி பேசியதாகவும், அவர் போலியாக இருக்கலாம் என்று தான் கூறியதாகவும் நடிகை மான்யா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். இதனால், 2 நாள்களாக கோலிவுட் சினிமாவில் சுற்றி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, <<18324641>>நடிகர் தனுஷ்<<>> தரப்பும் இதனை முற்றிலுமாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 13, 2026
கடலிலும் பாகிஸ்தானை கதறவிடும் BLA

ஈரான் எல்லை அருகே பாகிஸ்தான் கடலோரப் படை ரோந்து படகின் மீது பலுசிஸ்தான் விடுதலை படை(BLA) நடத்திய தாக்குதலில் 3 பாக்., வீரர்கள் உயிரிழந்தனர். கடல்சார் எல்லைகளில் தங்களது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான புதிய உத்தி இது என BLA கூறியுள்ளது. BLA-வுக்கு ஆப்கானிஸ்தான் அரசு புகலிடம் அளிப்பதாக பாக்., குற்றஞ்சாட்டும் நிலையில், அதற்கு தாலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
News April 13, 2026
கேபிள் சேனலில் ’ஜன நாயகன்’… அதிர்ச்சி

இணையத்தில் லீக்கான ’ஜன நாயகன்’ படம் கோவையில் லோக்கல் கேபிள் டிவி ஒன்றில் ஒளிபரப்பானது தவெக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்.11-ம் தேதி ‘ராசி பிரைம் மூவி’ என்ற லோக்கல் கேபிள் சேனலில், HD தரத்தில் படம் ஒளிபரப்பாகியுள்ளது. இதுகுறித்து தவெகவினர் அளித்த புகாரின் பேரில், கேபிள் ஆபரேட்டர் பழனிசாமி மீது FIR பதிவுசெய்த போலீசார், 4 ஹார்ட் டிஸ்க் & ஒரு கணினியை பறிமுதல் செய்துள்ளனர்.
News April 13, 2026
RR அணி மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய BCCI

RCB-க்கு எதிரான போட்டியில் டக்-அவுட்டில் (dugout) செல்போன் பயன்படுத்திய RR அணி மேனேஜர் ரோமி பிந்தருக்கு BCCI நோட்டீஸ் அனுப்பியுள்ளது. BCCI-ன் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவு, 48 மணி நேரத்திற்குள் நோட்டீஸுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. IPL விதிமுறைகளின்படி, டக்-அவுட்டில் அணி வீரர்கள், ஊழியர்கள் உள்பட யாருக்கும் செல்போன் பயன்படுத்த அனுமதி கிடையாது.


