News November 19, 2025
அட்ஜஸ்ட்மென்ட் சர்ச்சை: நடிகை மான்யா ஆனந்த் முற்றுப்புள்ளி

தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் எனக் கூறி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு <<18320110>>அட்ஜஸ்மென்ட்<<>> பற்றி பேசியதாகவும், அவர் போலியாக இருக்கலாம் என்று தான் கூறியதாகவும் நடிகை மான்யா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். இதனால், 2 நாள்களாக கோலிவுட் சினிமாவில் சுற்றி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, <<18324641>>நடிகர் தனுஷ்<<>> தரப்பும் இதனை முற்றிலுமாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 9, 2026
இது தென்மாநில குரல்களை நெரிக்கும் செயல்: ஸ்டாலின்

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் முடிவால் மக்களின் வரிப்பணம் வீணாகும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது பாஜக ஆதிக்கம் செலுத்தும் வட மாநிலங்களுக்கு ஆதரவாக வலுவூட்டி, தென்மாநிலங்களின் குரலை நெரிக்கும் என்றும் அவர் X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற முக்கிய நடவடிக்கையை தேர்தல்களுக்கிடையே திணிக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News April 9, 2026
VVPAT-ல் புகை வாக்குப்பதிவு நிறுத்தம்!

காரைக்காலில் கோத்துகுளம் அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் 15 நிமிடங்களுக்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. VVPAT இயந்திரத்தில் புகை வந்ததையடுத்து, அதனை வாக்குச்சாவடிக்கு வெளியே அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இயந்திரத்தின் பேட்டரி அதீதமாக சூடானதால் புகை வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது, பேட்டரி மாற்றப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
News April 9, 2026
இன்னும் போராடணுமா.. இன்னலில் தமிழக மக்கள்

நாடு சுதந்திரமடைந்து 79 ஆண்டுகளாகிவிட்டது. தமிழகத்தில் 17-வது பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. 12 முதல்வர்கள் இதுவரை மாநிலத்தில் ஆட்சி செய்துள்ளனர். 234 MLA-க்கள், 39 MP-க்கள் உள்பட ஆயிரக்கணக்கான உள்ளாட்சி நிர்வாகிகளும் உள்ளனர். இவ்வளவு இருந்தும், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக இன்றும் மக்கள் போராட வேண்டிய நிலை உள்ளது. உங்கள் கருத்து என்ன?


