News May 10, 2024
அட்சய திருதியை: நெல்லையில் மக்கள் உற்சாகம்

அனைத்து பகுதிகளிலும் அட்சய திருதியை விழா இன்று (மே 10) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நெல்லை, பாளை பகுதிகளில் உள்ள நகை கடைகள் காலை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. தங்க நகை மற்றும் புதிய பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதை காணமுடிகிறது. கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
Similar News
News September 17, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.16] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கணேசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News September 16, 2025
5 மாவட்டங்களுக்கு பனை விதைகள் அனுப்பி வைப்பு

திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலை மலைப் பயிர்கள் துறை சார்பில் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஒரு லட்சம் பனை விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று (செப்.16) நடைபெற்றது. நெல்லை பயிற்சி ஆட்சியர் நவலேந்து ஐஏஎஸ் கலந்து கொண்டு பனை விதைகள் நிரப்பப்பட்ட மூன்று வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
News September 16, 2025
நெல்லை வழியாக சென்னைக்கு ஏசி ரயில் அறிவிப்பு

தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி வழியாக சென்னை சென்ட்ரல் செங்கோட்டை இடையே ஏசி பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே இயக்குகிறது. செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இரு மார்க்கத்திலும் (06121/06122) இயக்கப்பட உள்ளன. அனைத்து பெட்டிகளும் ஏசி பெட்டியாக இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.