News March 16, 2025
அடையாள எண் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் நாமக்கல் மாவட்டத்தில் உடனடியாக தங்களுடைய கணினி பட்டா, ஆதார், கைப்பேசி எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலகம் அல்லது பொது சேவை மையத்தினை அணுகி மார்ச் 31-க்குள் இலவசமாக பதிவு செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 6, 2025
நாமக்கல்லில் இருந்து நாளை பெங்களூரு சிறப்பு ரயில் !

நாமக்கல் வழியாக வண்டி எண் 06103/06104 திருநெல்வேலி – ஷிமோகா ரயில் நாளை ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:55 மணிக்கு நாமக்கலில் இருந்து பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி, ஷிமோகா போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளதால் நாமக்கல் மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
News September 6, 2025
நாமக்கல்: NO EXAM அரசு வேலை.. ரூ.70,000 சம்பளம்!

நாமக்கல் மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். இதற்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 6, 2025
நாமக்கல்: BDO மாயம் வழக்கில் கார் கண்டுபிடிப்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பிரபாகரன் மாயமானதால், அவரது மனைவி யசோதா பள்ளிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் நாமக்கல் அடுத்த, வேலக்கவுண்டம்பட்டியில் BDO பிரபாகரனின் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழலில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் .