News February 20, 2025

அடையாளம் தெரிய வாகனம் மோதி மூதாட்டி பலி

image

அரவக்குறிச்சி கொடையூர் கிராமம் ஐந்து ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மலர்க்கொடி (67). கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் மலர்க்கொடி நேற்று ஐந்து ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது வடக்கு நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் மலர்க்கொடி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News August 23, 2025

கரூர்: இளைஞர்களுக்கு இலவச ட்ரோன் பயிற்சி

image

கரூர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் தாட்கோ நிறுவனத்தின் மூலம், இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட 4 பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சி காலத்தில் சீருடை, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News August 23, 2025

கரூரில் இலவச வக்கீல் சேவை வேண்டுமா..?

image

கரூர் மக்களே.., நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. அதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ▶️கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 23, 2025

கரூரில் கலை கட்டப் போகும் திருவிழா!

image

கரூரில் நாளை(ஆக.24) இயற்கை வேளாண்மை திருவிழா காலை 9:00 – மாலை 6:00 வரை கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில், கண்காட்சி, சிறப்புப் பயிற்சி பட்டறை, இயற்கை உணவு செய்முறை பயிற்சி, 100க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் முதலியவை இடம்பெறவுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு இலவச இயற்கை உணவு வழங்கப்படும். இதற்கு நுழைவு கட்டணம் இல்லை, என இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார். (SHARE)

error: Content is protected !!