News May 17, 2024
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சாவு

மடிப்பாக்கம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் (46). மின் வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர். நேற்று இரவு சபரி சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அதே வாகனத்தின் சக்கரம் தலையில் ஏறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 23, 2025
சென்னையில் தெருநாய் தொல்லையில் இருந்து தப்பிக்க! 2/2

நீங்கள் பயந்தால் அதை நாய்களால் உணர முடியும். எனவே பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க வேண்டும். நாய் உங்களை நோக்கி வந்தால் அதை திசை திருப்ப உங்கள் கையில் இருக்கும் பொருளை கீழே தூக்கி வீசலாம் அல்லது கீழே குனிந்து கல் எடுப்பது போல பாவனை செய்யலாம். பைக்கில் போனால் நாயை கண்டதும் வேகமாக முறுக்க கூடாது. முக்கியமாக நாய் மீது எதையும் தூக்கி வீச கூடாது. இதை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். ஷேர் பண்ணுங்க!
News August 23, 2025
சென்னையில் தெருநாய் தொல்லையில் இருந்து தப்பிக்க! 1/1

சென்னையில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பெரும் விபத்திலிருந்து தற்காத்து கொள்ள சில வழி முறைகளை பின்பற்றலாம். முதலில் உங்கள் பகுதியில் தெருநாய் தொல்லை அதிகமாக இருந்தால் 1913 என்ற எண்ணிலோ இந்த <
News August 23, 2025
சென்னை நாள் – புத்தக கண்காட்சி

சென்னை அசோக் நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் நேற்று சென்னை நாள் புகைப்படக் கண்காட்சி, ஆவணப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து பணிபுரியும் எழுத்தாளர்கள், ஊழியர்கள், புத்தக வாசிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் சென்னை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.