News October 2, 2024
அடுத்த 50 ஆண்டுகளில் அரிசி கிடைக்காது – மதுரை ஐகோர்ட்

விவசாயத்திற்கு தண்ணீர் வழங்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் உண்பதற்கு அரிசி கிடைக்காது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம் மருதூர் காவிரி ஆற்றில் நடக்கும் குடிநீர் திட்டப்பணிகளால் விவசாயம் பாதியாக குறைந்ததாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில், கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.
Similar News
News August 16, 2025
மதுரையிலே அரசு இலவச AI பயிற்சி! வேலை ரெடி!

மதுரை மக்களே, டிகிரி படித்தவர்களுக்கு AI பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை அரசு உறுதி செய்து வருகிறது. TN Skill என்ற இணையதளத்திற்கு சென்று நிகழ்கால உச்ச தொழில்நுட்பமான AI டெக்னலாஜி உள்ளிட்ட ஐடி துறையின் பல்வேறு பயிற்சிகளை தேர்வு செய்து நம்ம மதுரையிலேயே இலவசமாக படிக்கலாம். ஆக. 18ல் வகுப்புகள் ஆரம்பமாக உள்ளது. இங்கு வேலைவாய்ப்பும் உறுதிசெய்ய வழிவகை செய்யப்படுகிறது. இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.
News August 16, 2025
மதுரை மக்களே இதை பயன்படுத்திக்கோங்க

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.செப்.28 ல் குரூப் 2 பணியிடங்கள் உட்பட 645 காலியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் நேரிலோ அல்லது 96989-36868 எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். பணம் கொடுத்து சேருவதற்கு பதில் அரசின் இலவச வகுப்பில் சேர்ந்து பயனடைங்க மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News August 16, 2025
காவல்துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு.

மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கடவுச்சொல் பாதுகாப்பு
தனித்துவமான கடவுச்சொற்களை உருவாக்குங்கள். இரண்டு அடுக்கு பாதுகாப்பினை பயன்படுத்தவும். கடவுச்சொற்களை யாருடனும், ஒருபோதும் பகிர வேண்டாம். கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றவும். தனிப்பட்ட விவரங்களை பயன்படுத்த வேண்டாம். குறைந்தது 8 எழுத்துகள் கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.