News November 3, 2025
அடுத்த 5 ஆண்டுகளில் 50 விண்வெளி திட்டங்கள்: இஸ்ரோ

CMS-03 செயற்கைக்கோள் திட்டமிட்ட நேரத்தில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் 50 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த PM மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
நவ.6-ல் அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம்!

சென்னை தலைமைச் செயலகத்தில் நவ.6-ம் தேதி அமைச்சர்களின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், MP, MLA-க்களுடன் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத தவெக போன்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படாது என தெரிகிறது.
News November 3, 2025
பெண்கள் வெளியே தலைகாட்டவே அச்சம்: நயினார்

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் செய்யப்பட்ட விவகாரம் விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து நயினார், வீட்டில் இருந்தாலும் வெளியில் போனாலும் பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள் என குற்றம் சாட்டினார். கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே பொழுது விடிகிறது; DMK ஆட்சியில் பெண்கள் வெளியே தலைகாட்டவே அஞ்சுகின்றனர். ஆனால், CM கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.
News November 3, 2025
வீணாவதை பசித்தவருக்கு கொடுக்கலாமே!

மக்கள் பசியால் தவிக்கும் அதே நேரத்தில்தான், டன் கணக்கிலான உணவுகளும் வீணாக்கப்படுகின்றன. இச்சூழலில்தான், சூப்பர் மார்க்கெட், கடைகளில் பழம், காய்கறி, பிரெட், பிஸ்கெட் போன்றவை விற்கப்படாமல் போனால், அவற்றை பசியால் வாடுபவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சட்டத்தை 2016-ல் பிரான்ஸ் அரசு கொண்டுவந்தது. பசியால் வாடுபவர்கள் அதிகமிருக்கும் இந்தியாவிலும் இச்சட்டம் கொண்டுவரலாம் அல்லவா. நீங்க என்ன சொல்றீங்க?


