News August 30, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை

image

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (9 மணி வரை) 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி நாமக்கல், மயிலாடுதுறை, தென்காசி, குமாரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். எனவே, வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News July 8, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 389 ▶குறள்: செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. ▶பொருள்: துணையாக இருப்போர் செவிபொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைச் சொன்னாலும் அவற்றின் நன்மை கருதிப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும்.

News July 8, 2025

IND விளையாடிய மைதானத்தை கலாய்த்த கம்மின்ஸ்

image

IND VS ENG 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் பாஸ்பால் என சொல்லி ஆடுகளத்தை பிளாட்டாக்குவதாக இங்கி., கிரிக்கெட் போர்டை பலர் விமர்சித்து வருகின்றனர். தற்போது இப்போட்டியை பற்றி பேசிய கம்மின்ஸ், இதுபோன்ற மைதானத்தில் யார் பந்துவீச்சாளராக விரும்புவார்கள்? என நக்கலடித்துள்ளார். இங்கி., உள்ள மிக மோசமான 3-வது பிளாட் பிட்ச் என எட்ஜ்பேஸ்டன் மைதானத்தை விமர்சித்துள்ளார்.

News July 8, 2025

மழையால் சின்னாபின்னமான கூட்டுறவு வங்கி

image

இமாச்சலில் உள்ள துனாங் நகரில் சுமார் 8,000 வாடிக்கையாளர்கள் கொண்ட மாநில கூட்டுறவு வங்கி உள்ளது. மழை வெள்ளத்தால் இந்த வங்கியின் ஒரு கதவு அடித்துச் செல்லப்பட்டது. இரண்டு கதவுகள் வளைந்து சேதமடைந்தது. குப்பைகள், கட்டிட இடிபாடுகள், சகதிகள் முதல் தளத்தை முற்றிலுமாக மூடியுள்ளது. இதனால் வங்கியில் உள்ள லட்சக்கணக்கான பணம், அடகு வைத்திருந்த நகைகள் என்னவானது? என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!