News November 14, 2025
அடுத்த மாநாட்டை அறிவித்தார் சீமான்

நாதக சார்பில் வரும் 21-ம் தேதி திருநெல்வேலியில் கடலம்மா மாநாடு நடத்தப்படும் என சீமான் அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில், மீனவர்கள் பிரச்னை, கடல் வளம் பாதுகாப்பு குறித்து பேசப்பட உள்ளது. முன்னதாக, சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளை பேசும் பொருட்டு நாதக சார்பில் ஆடு – மாடு மாநாடு, மலைகள் பாதுகாப்பு மாநாடு, மரங்களை காப்போம் மாநாடு நடத்தப்பட்டன. அதேபோல், தண்ணீர் மாநாடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 11, 2026
170 வேட்பாளர்களை அறிவித்தார் வேல்முருகன்

தவாக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் பட்டியலை வேல்முருகன் வெளியிட்டுள்ளார். 2 கட்டங்களாக வெளியிட்டுள்ள இப்பட்டியலில் 170 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டார் தொகுதிகளான கொளத்தூரில் ஊர்மிளா, எடப்பாடியில் கோவிந்தராஜ், திருச்சி கிழக்கில் ராயல் ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இக்கூட்டணிக்கு கேமரா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
News April 11, 2026
விஜய்க்கு ஆதரவாக நானா? பார்த்திபன் மறுப்பு

விஜய் தான் அடுத்த CM என பார்த்திபன் கூறியதாக செய்தி பரவியது. இந்நிலையில், இதுபோன்ற கருத்தை தான் தெரிவிக்கவில்லை என அவர் மறுத்துள்ளார். மேலும், இந்த செய்தியை வெளியிட்ட நபரிடம், தான் பேசியதற்கான proof உங்களிடம் உள்ளதா என கேட்டேன். அந்த நபரிடம் proof இல்லததால், போஸ்ட்டை உடனே remove செய்துவிட்டார் எனக்கூறிய பார்த்திபன், இதுபோன்ற செய்தியை வெளியிடுவதற்கு முன் யோசித்து செயல்படவும் வலியுறுத்தினார்.
News April 11, 2026
விஜய் பரப்புரையில் விபத்துகள்: ஸ்டாலின் பதில்

புதிதாக எத்தனை பேர் வந்தாலும் திமுகவே வெல்லும் என ஸ்டாலின் கூறியுள்ளார். விஜய்யின் பரப்புரையின்போது ஏற்படும் விபத்துகள் குறித்து கேட்டதற்கு, நாட்டு மக்கள் அனைவரும் இதை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்; விரைவில் அவர்கள் திருந்துவார்கள் என்றார். மேலும், தற்போதைய சூழலில் 234 தொகுதிகளிலும் திமுகவே வெற்றிபெறும் என்ற நிலை உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.


