News October 10, 2024

அடுத்த மாதம் முதல் மீண்டும் பீச் – வேளச்சேரி ரயில்

image

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் தடத்தில், வரும் நவம்பர் மாதம் முதல் மீண்டும் ரயில் சேவையைத் தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. எழும்பூர் – கடற்கரை இடையே 4ஆவது ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக, 2023 ஆகஸ்ட் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை பறக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் நவம்பர் மாதத்திற்குள் நிறைவுபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News December 9, 2025

சென்னை: பொறுப்பு டிஜிபி மருத்துவமனையில் அனுமதி

image

தமிழக பொறுப்பு டிஜிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக தமிழக அரசு நியமனம் செய்துள்ள நிலையில், இன்று நெஞ்சுவலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News December 9, 2025

சென்னை – நுங்கம்பாக்கம், தி.நகர் பகுதிகளில் வருமானவரி சோதனை

image

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள ரிபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திலும், தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள வைட் ஹவுஸ் வைர நகைக்கடையிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு குறித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், நிறுவன ஆவணங்கள் மற்றும் நிதி பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன. சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு.

News December 9, 2025

சென்னை மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <>இங்கு <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!