News January 16, 2026
அடுத்து அதிமுக ஆட்சி தான்! அடித்து சொன்ன EPS

TN-ல் நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சியை விரட்ட மக்கள் காத்திருப்பதாக EPS தெரிவித்துள்ளார். MGR-ன் 109-வது பிறந்த நாளையொட்டி (ஜன.17), தொண்டர்களுக்கு EPS கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்களை தீட்டினாலும் அதை தவிடுபொடியாக்கி அதிமுக வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். TN மக்களுக்கு நல்லாட்சி தரும் கடமை, பொறுப்பு அதிமுகவினர் அனைவருக்கும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News February 5, 2026
CINEMA 360°: ரீ-ரிலீசாகும் ‘மெளனம் பேசியதே’

*ராம் சரணின் ‘பெத்தி’ ஏப்.30-ல் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு *பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ மார்ச் 26-ம் தேதி ரிலீசாகிறது *ராதிகா சரத்குமார் நடிக்கும் ‘தாய் கிழவி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார் *சூர்யாவின் ‘மெளனம் பேசியதே’ பிப்.13-ல் ரீ-ரிலீசாகிறது *சரத்குமார் நடித்துள்ள ‘ஆழி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது
News February 5, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News February 5, 2026
9 கோடி பணிகள் அழியும்: மயில்சாமி அண்ணாதுரை

காலத்திற்கேற்ற திறன்களை வளர்த்து கொண்டு முன்னேறுங்கள் என பட்டதாரிகளுக்கு மயில்சாமி அண்ணாதுரை அறிவுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலை., பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொண்டார். அப்போது, உலக பொருளாதார மன்றம் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர், AI அபரிமித வளர்ச்சியால் 2030-க்குள் 17 கோடி புதிய பணிகள் உருவாக்கப்படும் என்றும், 9 கோடி பணிகள் காணாமல் போய்விடும் எனவும் எச்சரித்துள்ளார்.


