News May 17, 2024
அடிப்படை வசதியின்றி சிவகங்கை ரயில்வே நிலையம்

சிவகங்கை மாவட்ட தலைநகரான இங்கிருந்து தான் காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, மானாமதுரைக்கு அதிகளவில் பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகள் வருகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து தரவில்லை. ரயில் நிலையத்தில் பின்னால் தனியார் பங்களிப்புடன் அமைத்த நவீன கழிப்பறை செயல்பாடின்றி முடங்கி கிடக்கிறது. நடவடிக்கை எடுக்க ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News December 13, 2025
சிவகங்கை: பள்ளியில் சமைத்து சாப்பிட்ட திருடர்கள்.!

கல்லல் அருகேயுள்ள ஆலங்குடி ஊராட்சி, மேலமாகாணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு வந்த திருடர்கள் சமையல் அறையில், சத்துணவு முட்டைகளை, கேஸ் அடுப்பில் அவித்து சாப்பிட்டு விட்டு கணினி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் அளித்த புகாரின் பேரில் கல்லல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 12, 2025
மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்

சிவகங்கை மாவட்டம், 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வானது, நிர்வாக காரணங்களினால் வருகின்ற 27.12 2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்

சிவகங்கை மாவட்டம், 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வானது, நிர்வாக காரணங்களினால் வருகின்ற 27.12 2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.


