News March 20, 2025

அடக்கம் செய்த போலீஸ்: கணவரை தேடிவந்த மனைவி

image

ஜோலார்பேட்டை அருகே உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆண் உடல் அடையாளம் தெரியாததால் போலீசார் கடந்த மார்.17ஆம் தேதி அடக்கம் செய்தனர். இதற்கிடையே, அடக்கம் செய்தவரின் மனைவி கணவரை தேடி நேற்று (மார்.19) வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. 10 நாட்களாக விசாரணை நடத்தி வந்தபோது, உடலை கைப்பற்ற யாரும் வராததால் போலீசார் அடக்கம் செய்தனர். ஆனால், அடக்கம் செய்த மறுநாளே அவரது மனைவி வந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News July 11, 2025

BREAKING: திருப்பத்தூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

கடந்த பிப்ரவரி- 2ஆம் தேதி ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில், அந்த பெண்ணிற்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டதோடு கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. இந்த வழக்கில் கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளிவிட்ட ஹேம்ராஜ் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தண்டனை விவரம் திங்களன்று வெளியாகவுள்ளது.

News July 11, 2025

குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

image

▶திருப்பத்தூரில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News July 11, 2025

ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 2/2

image

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்
▶<>இந்த லிங்கில் <<>>திருப்பத்தூரில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபிஸ் முகவரி மற்றும் தொடர்பு எண்களும் உள்ளன. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!