News June 15, 2024

அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைகேட்புக் கூட்டம்

image

கோவை அஞ்சல் மண்டலத்தின் ஓய்வூதியதாரர்கள் குறைகேட்பு கூட்டம் ஜூலை 3 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது. எனவே ஈரோடு கோட்டத்திற்குட்பட்ட ஓய்வூதியதாரர்கள் தங்களது புகார்கள், மனுக்களை தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் வரும் 20 ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு-638001 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கி.கோபாலன் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 14, 2025

ஈரோடு: ’ஆக.15’ இதைக் கண்டால் உடனே CALL!

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் ஓட்டல்களுடன் கூடிய பார்கள் என அனைத்துக் கடைகளும் நாளை(ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படுகிறது. இந்நிலையில், நாளை சட்டவிரோதமாக ஏதேனும் மது பான விற்பனையை கண்டால் உடனே 10581-ஐ அணுகி புகார் அளிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 14, 2025

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு

image

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி நேற்று (13.08.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு அலுவலர், பணியாளர்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் உட்பட பலர் உள்ளனர்.

News August 13, 2025

ஈரோடு: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை ஆக,14 கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது. தாளவாடி ஒன்றியம்-சமுதாயகூடம்-சிம்டஹல்லி, சத்தியமங்கலம் ஒன்றியம்-காமாட்சி அம்மன் கோவில் மண்டபம்-அரசூர், மொடக்குறிச்சி ஒன்றியம்-கொங்கு மஹால்-முகாசி அனுமன்பள்ளி, சென்னிமலை ஒன்றியம்-தேவி மஹால்-பாலாஜி கார்டன், பவானி ஒன்றியம்-சிவகாமி மஹால்-சூரியம்பாளையம்.

error: Content is protected !!