News January 2, 2025
அஞ்சலக ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் ஜன 8ஆம் தேதி கோட்ட அளவிலான அஞ்சலக ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. ஓய்வூதியர்கள், தங்களது குறைகள், புகார்களை பென்சன் அதாலத் என தபால் உறையின் மீது எழுதி அனுப்பலாம். அதில் ஓய்வூதிய கணக்கு எண் உட்பட பிற விவரங்களை முழுமையாக குறிப்பிட வேண்டும் என்று கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் தெரிவித்தார்.
Similar News
News August 20, 2025
கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆக.22 காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. எட்டாம் வகுப்பு பட்டப்படிப்பு ஐடிஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கு மேற்பட்ட கம்பெனிகள் பங்கேற்க உள்ளன. விருப்பமுள்ளவர்கள்<
News August 20, 2025
கிருஷ்ணகிரியில் நாளை மின் தடை

கிருஷ்ணகிரி நகர், தொழிற்பேட்டை, பவர் ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஐக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி-1, வீட்டு வசதி வாரியம் பகுதி-2 பழையபேட்டை, குண்டலபட்டி, சுத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி ஆகிய இடங்களில் நாளை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 20, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரியில் இன்று (ஆக.20) இரவு 10 மணி முதல் காலை (ஆக.21) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு 100 ஐ டயல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க