News March 19, 2026
அஜித்குமார் மரணம்: தேர்தலில் தாக்க காத்திருக்கிறதா?

தற்போதைய ஆட்சியில் 25 கஸ்டடி மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. அஜித்குமார் முதல் ஆகாஷ் வரை தென் மாவட்டங்களில் மரணங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. காரணம், 2020-ல் சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த விவகாரம் 2021 தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
Similar News
News April 6, 2026
பயிர்க்கடன் தள்ளுபடி.. EPS தேர்தல் வாக்குறுதி

அதிமுக ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என EPS தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். ஏற்கெனவே, கல்வி கடன் தள்ளுபடி, நடைபாதை வியாபாரிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
News April 6, 2026
முன்பு கொரோனா.. இப்போது LPG: ராகுல் காந்தி

கொரோனாவை போலவே எரிவாயு பற்றாக்குறை நெருக்கடியையும் மோடி அரசு மோசமாக கையாள்வதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சமையல் எரிவாயுவின் விலையை சமாளிக்க முடியாததால், புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் சொந்த கிராமங்களுக்கு தப்பி ஓடுகிறார்கள் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், எந்த நெருக்கடி வந்தாலும் முதலில் ஏழைகள் பாதிக்கப்படும் நிலை இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News April 6, 2026
CSK தோல்விக்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்

கடந்த IPL சீசன் தனக்கு ஏமாற்றம், வலி மிகுந்ததாக இருந்ததாக அஸ்வின் பேசியுள்ளார். தன்னை விடுவிப்பதா, தக்க வைப்பதா என்ற தலைவலியை நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டாம் என்பதற்காகவே தானாக முன்வந்து ரிட்டயர் ஆனதாகவும் கூறியுள்ளார். இதனால், அணிக்கு ₹10 கோடி மிச்சமானதாக குறிப்பிட்ட அவர், நடப்பு சீசனில் CSK-வின் தோல்விக்கு, ஃபாஸ்ட் பவுலர்களை சரியாக பயன்படுத்தாததே காரணம் என தெரிவித்துள்ளார்.


