News January 5, 2025

அச்சுறுத்தும் திருவாரூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை

image

திருவாரூர் – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடந்த பிப்ரவரி மாதம், காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். பணிகள் சரிவர முடிக்கப்படாத காரணத்தால் இந்த சாலையில் கடந்த 10 மாதங்களில் மட்டும் சுமார் 30-க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்துள்ளன. மேலும் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி பகுதியில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பதால் அப்பகுதி மக்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர். SHARE NOW

Similar News

News July 10, 2025

திருவாரூர்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் காப்பீடு பெறலாம்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. குறைந்தது 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். மேலும் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும்.

News July 10, 2025

திருவாரூர்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை VAO-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் VAO யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருவாரூர் மாவட்ட மக்கள் 04366226970 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க

News July 10, 2025

திருவாரூர்: குறுவை பயிர் காப்பீடு-கலெக்டர் கொடுத்த தகவல்

image

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை பயிர் காப்பீடு செய்திட வருகிற 31-ம் தேதி கடைசி நாளாகும். எனவே, குறுவை பயிர் சாகுபடி விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ (இ-சேவை மையங்கள்), www.pmfby.gov.in என்ற இணையதளத்தில் நேரடியாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம் என கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை SHARE செய்ங்க…

error: Content is protected !!