News June 27, 2024
அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளை மூட உத்தரவு

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி கல்வி இயக்குனரகத்தின் உரிய அங்கீகாரம் பெறாத 33 தனியார் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அங்கீகாரம் பெறாமல் பள்ளி நடத்தினால் நாள் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News November 8, 2025
வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

காரைக்கால் மாவட்டம் மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் 14.11.2025 வெள்ளிக்கிழமை அன்று “தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை” என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் தென்னையில் நாற்று உற்பத்தி, உரமேலாண்மை, நீர் நிர்வாகம், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு போன்ற பயிற்சியானது காலை 10.00 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை நடைபெற உள்ளது.
News November 8, 2025
புதுவையில் 2 ஜவுளி கடையில் ரூ. 32 ஆயிரம் திருட்டு

புதுவை, சாரம், லட்சுமணன், இவர் நேரு வீதியில் 2 ஜவுளி கடைகளை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் 162ம் எண் கடையை திறந்து உள்ளே சென்றபோது, கடையின் மேல்தள பால் சீலிங் உடைத்து கல்லா பெட்டியில் வைத்திருந்த 8 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது மற்றொரு 168 கடையில் 24,000 பணம் திருடு போயிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்
News November 8, 2025
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

புதுவை, காலாப்பட்டு போலீசார் தகவலின் பேரில் சில கடைகளில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது புதுவை பல்கலைகழகம் பகுதியில் 4 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற காலாப்பட்டு பெர்னாண்டஸ் (49), கனகசெட்டிகுளம் சக்திவேல் (47), விக்னேஸ்வரன் (30), பாபு (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களது கடைகளில் ரூ.9,655 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


