News February 17, 2026
அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்!

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கடந்த 13 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். 14வது நாளாக நேற்று (பிப்.16) தேர்தல் வாக்குறுதி எண்: 313-ஐ நிறைவேற்ற கோரி 313 வடிவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் நோஹிரா தலைமை தாங்கினார்.
Similar News
News February 19, 2026
கிருஷ்ணகிரி கொப்பரை தேங்காய் ஏலம்

ஊத்தங்கரை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு வர்த்த முறையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைப்பெற்றது. இதில் 10 அரை குவிண்டால் கொப்பரை ஏலத்திற்கு வந்தது. இதில் அதிகபட்சமாக 177.20 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 111 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 1 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
News February 19, 2026
கிருஷ்ணகிரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பிப்-20 அன்று நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதில் ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாகவும் 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 19, 2026
கிருஷ்ணகிரியில் கூண்டோடு கைது!

கிருஷ்ணகிரியில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் 15-வது நாளாக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலைய அண்ணா சிலை முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்ற 260 அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.


