News June 28, 2024
அக்னிவீர் வாயு ஏர்மேன் ஆட்சேர்ப்பு

2024 – 2025ஆம் ஆண்டிற்கான அக்னிவீர் வாயு ஏர்மேன் தேர்வு சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள 8வது ஏர்மேன் தேர்வு மையத்தின் மூலம், இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமணமாகாத ஆண், பெண், வேலை நாடுபவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்கள் அறிய www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தை அணுகவும் என்று மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 6, 2025
பெரம்பலூர்: குட்கா விற்பனை – ஒருவர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் சிறுவாச்சூர் கிராமத்தில் வசிக்கும் வெங்கடேஷ் (25) என்பவரின் வீட்டில் இருந்து அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை, சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில், போலீசார் வெங்கடேஷை கைது செய்து, அவரிடமிருந்து 106.822 கி.கி குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
News November 6, 2025
பெரம்பலூர்: தேர்வு இல்லை-அரசு வேலை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News November 6, 2025
பெரம்பலூர்: புதிய முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், நேற்று (நவ.05) திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பணியிட மாறுதலில் பெரம்பலூரின் புதிய முதன்மைக் கல்வி அலுவராக சுவாமி முத்தழகன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அரியலூர் மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலராக பணியாற்றி பதவி உயர்வில் திருவண்ணாமலை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


