News March 24, 2025
விவசாயிகளுக்கு ₹6,000: மார்ச் 31க்குள் விண்ணப்பிக்கவும்

விவசாயிகள் அடையாள எண் பெற மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. விவசாயிகள் தனி அடையாள எண் பெறாவிட்டால், மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் ₹6,000 பெற முடியாது என கூறியுள்ளது. ஏற்கெனவே, PM கிசான் திட்டத்தில் இப்போது இணைந்தாலும், உதவித் தொகை வழங்கப்படும் என்றும், தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்குமாறும் மத்திய அரசும் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 29, 2025
இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக வேண்டும்: இபிஎஸ்

<<15922582>>நீட் <<>>மரணங்களுக்கு முதல்வரின் பதில் என்ன?, நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக வேண்டும் என்று இபிஎஸ் சாடியுள்ளார். ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது என்று மாணவர்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள், மாணவர்களை ஏமாற்றாதீர் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 29, 2025
த்ரிஷாவுக்கு திருமணம்? PHOTO

நடிகை த்ரிஷா (41) ‘காதல்’ குறித்து வெளியிட்டுள்ள பதிவு வைரலாகிறது. சில ஆண்டுகளுக்கு முன், தொழிலதிபருடன் நடைபெறவிருந்த திருமணம் பாதியில் நின்றது. அதன்பின் அவரது திருமணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், மணப்பெண் கோலத்தில் இருக்கும் போட்டோ உடன் ‘Love always wins’ என X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக கமெண்ட் செய்கின்றனர்.
News March 29, 2025
வசூல் ஏஜெண்டுகளாக வங்கிகள்: கார்கே

மோடி அரசால் வங்கிகள் வசூல் ஏஜெண்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக காங்., தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். ஏடிஎம்மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ₹23 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், வங்கிக் கணக்குகள் பயன்பாட்டில் இல்லாவிட்டால் அதற்கும் ₹100 முதல் ₹200 வரை அபராதம் விதிக்கப்படுகிறது என்றார். இதுபோன்ற நடவடிக்கையை வங்கிகள் திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.