News August 6, 2024

4.64 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் ₹5000

image

2022-23 கல்வியாண்டில் +2 தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, விரைவில் ₹5000 வழங்கப்பட உள்ளது. மொத்தம் 5.16 லட்சம் பேர் தேர்வான நிலையில், முதல்கட்டமாக 4.64 லட்சம் பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யும் பணி நேற்றுடன் முடிந்துள்ளதால், மாணவர்களின் வங்கிக் கணக்கில் விரைவில் ₹5,000 வரவு வைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Similar News

News December 29, 2025

பொண்ணு எங்க வந்துச்சி.. புண்ணுதான் வந்துச்சி

image

சென்னையில் வடமாநில இளைஞர் ஒருவர், ஃபேஸ்புக்கில் உல்லாசத்திற்காக பெண் வேண்டும் என கேட்டு மர்ம நபருக்கு ₹28,000 பணம் அனுப்பியுள்ளார். பெண் வராததால், ஃபேஸ்புக் ஆசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை வாங்கி, அதில் சர்க்கரை கலந்து கையில் தேய்த்துக்கொள், பெண் வருவார் என கூறியுள்ளனர். இதனை அந்த இளைஞர் செய்ய, கையில் புண் தான் வந்துள்ளது. பின்னரே, இது ஃபேக் ஐடி என தெரிய வந்துள்ளது.

News December 29, 2025

கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு தொடங்க அனுமதி!

image

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடைபெறும். அதன்படி வரும் ஜனவரியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறந்த பின்னர் அகழாய்வு பணிகள் தொடங்கும். இதுவரை சுமார் 20,000 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், 11-ம் கட்ட ஆய்வு மூலம் வைகை நாகரிகத்தின் எஞ்சிய ரகசியங்கள் வெளிவரும்.

News December 29, 2025

மீண்டும் இணைந்தனர்.. அரசியலில் முக்கிய திருப்பம்

image

மகாராஷ்டிரா மாநில மாநகராட்சித் தேர்தலில் சரத் பவார் – அஜித் பவார் அணிகள் இணைந்து போட்டியிடவுள்ளன. பிம்பரி – சிஞ்ச்வாட் நகராட்சி தேர்தலில் சரத் பவாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அஜித் பவார் அறிவித்துள்ளார். மீண்டும் பவார்கள் கைகோர்த்துள்ளது அம்மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. <<18692105>>மும்பையில்<<>> தனித்தே போட்டியிடவுள்ளதாக அஜித் பவார் தரப்பு அறிவித்திருந்தது.

error: Content is protected !!