News August 6, 2024
4.64 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் ₹5000

2022-23 கல்வியாண்டில் +2 தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, விரைவில் ₹5000 வழங்கப்பட உள்ளது. மொத்தம் 5.16 லட்சம் பேர் தேர்வான நிலையில், முதல்கட்டமாக 4.64 லட்சம் பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யும் பணி நேற்றுடன் முடிந்துள்ளதால், மாணவர்களின் வங்கிக் கணக்கில் விரைவில் ₹5,000 வரவு வைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Similar News
News November 17, 2025
SC பிரிவிலும் கிரீமிலேயர் வேண்டும்: CJI பிஆர் கவாய்

OBC-யில் உள்ளதை போல, பட்டியல் சாதியினர்(SC) இட ஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் முறையை (வருவாய் உச்சவரம்பு), வரவேற்பதாக CJI பி.ஆர்.கவாய் தெரிவித்தார். ஆந்திராவில் நடந்த ‘இந்தியா & உயிர்ப்புள்ள அரசியலமைப்பின் 75 ஆண்டுகள்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரே சமூகமாக இருந்தாலும், IAS ஆபீசரின் பிள்ளையையும், ஏழை விவசாய தொழிலாளியின் பிள்ளையையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்றார்.
News November 17, 2025
SC பிரிவிலும் கிரீமிலேயர் வேண்டும்: CJI பிஆர் கவாய்

OBC-யில் உள்ளதை போல, பட்டியல் சாதியினர்(SC) இட ஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் முறையை (வருவாய் உச்சவரம்பு), வரவேற்பதாக CJI பி.ஆர்.கவாய் தெரிவித்தார். ஆந்திராவில் நடந்த ‘இந்தியா & உயிர்ப்புள்ள அரசியலமைப்பின் 75 ஆண்டுகள்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரே சமூகமாக இருந்தாலும், IAS ஆபீசரின் பிள்ளையையும், ஏழை விவசாய தொழிலாளியின் பிள்ளையையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்றார்.
News November 17, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

கனமழை காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் நாளை(நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகையில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால், அங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படலாம்.


