News October 23, 2024

ரோஸ் மில்க் நல்லதல்ல… எச்சரிக்கும் மருத்துவர்கள்!

image

கேக், பஞ்சு மிட்டாய், ஐஸ் பிஸ்கெட் ஆகியவற்றை அடுத்து குழந்தைகள் விரும்பி பருகும் ரோஸ் மில்க் பானத்திலும் ஆபத்தான ரசாயனங்கள் கலக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஸ் மில்க் தயாரிப்பில், erythromycin, carmoisine, ponceau 4R போன்ற செயற்கை நிறமிகளை அளவுக்கு அதிகமாக கலக்கின்றனர். மேலும், Rhodamine B என்ற நச்சு ரசாயனமும் கலக்கப்படுகிறது. இதனால் உடல்நல பாதிப்புகளும், புற்றுநோய் அபாயமும் அதிகரிக்கிறது.

Similar News

News November 25, 2025

திருவாரூர்: கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்

image

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆண்களுக்கான தழும்பில்லாத நவீன குடும்ப நல சிகிச்சை முகாம் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன் சந்திரன் கொடியசைத்து இன்று துவக்கி வைத்தார். இதில் மருத்துவ துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News November 25, 2025

வரலாற்று படுகொலையின் சாட்சி மௌனமானது!

image

வரலாற்றின் கருப்பு பக்கமாக கருதப்படும் நிகழ்வுகளில் ஒன்றான துல்சா இனப்படுகொலையில் இருந்து தப்பித்தவரான வயோலா பிளெட்சர் காலமானார். 1921-ல் அமெரிக்காவின் துல்சா நகரில் கருப்பின மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். நகரமே அழிக்கப்பட்ட நிலையில், சுமார் 6,000 பேர் பாதிக்கப்பட்டு, 300 பேர் பலியாகினர். அப்போது 7 வயதாக இருந்த வயோலா பிளெட்சர், தற்போது 111 வயதில், வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார்.

News November 25, 2025

தாக்கத்தை ஏற்படுத்துமா OPS, செங்கோட்டையன் அரசியல்

image

அதிமுகவை ஒருங்கிணைத்தே தீருவோம் என்று தேவர் குருபூஜை அன்று டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் சபதம் ஏற்றனர். ஆனால், சபதம் எடுத்து 25 நாள்களிலேயே புதிய கட்சியை தொடங்குவேன் என்று OPS கூறுகிறார். மறுபுறம் செங்கோட்டையனோ தவெகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்க தொடங்கினால், 2026-ல் தமிழக அரசியலில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கமெண்டில் சொல்லுங்க.

error: Content is protected !!