News April 2, 2025

துப்புறவு பணியாளர்களுக்கு ₹33.88 கோடி வரி

image

மாதம் ₹15,000 வருமானம் ஈட்டும் உ.பியைச் சேர்ந்த துப்புறவு பணியாளர் கரண் குமாரை, ₹33.88 கோடி வரி செலுத்த சொல்லி IT நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 10 நாள்களில் நடக்கும் 3ஆவது சம்பவம் இதுவாகும். முன்னதாக, ஒரு ஜூஸ் விற்பனையாளருக்கு ₹7.54 கோடி, பூட்டு தொழிலாளிக்கு ₹11.11 கோடி வரி கட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. PAN தரவுகள் மோசடியாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

Similar News

News April 7, 2025

அதிமுகவில் அண்ணன், தம்பி போல் இருக்கிறோம்

image

அதிமுகவில் எந்த விரிசலும் இல்லை; அண்ணன், தம்பி போல உள்ளோம் என்றும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததால், செங்கோட்டையன் மட்டும் அவையில் இருந்தார் எனவும் EX மினிஸ்டர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நிர்மலா உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு, நான் கூடத்தான் நட்டாவை சந்தித்தேன்; தொகுதி பிரச்னை தொடர்பாக மத்திய அமைச்சர்களை MLAக்கள் சந்திப்பது ஒன்றும் புதிதல்ல என்றும் நாசூக்காக பதிலளித்தார்.

News April 7, 2025

ஒரே நாளில் ₹85,854 கோடியை இழந்த பணக்காரர்கள்

image

இன்று உலகளவில் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்ததால், இந்தியாவின் 4 பெரும் பணக்காரர்கள் ₹85,854 கோடியை இழந்துள்ளனர். அதிகபட்சமாக அம்பானி ₹30,906 கோடியை இழந்துள்ளார். இந்த பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ள அதானி ₹25,757 கோடியை இழந்துள்ளார். OP Jindal குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் ₹18,888 கோடியையும், HCL Technologies நிறுவனர் ஷிவ் நாடார், ₹12,878 கோடியையும் இழந்துள்ளனர்.

News April 7, 2025

23 பேரால் கேங்க் ரேப்… ஒரு வாரமாக சிறுமிக்கு கொடுமை!

image

உ.பி.யில் 23 மனித மிருகங்களால் ஒரு சிறுமி வேட்டையாடப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 12-ம் வகுப்பு பயிலும் மாணவி, தனது நண்பருடன் பாருக்கு சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர்கள் குளிர்பானத்தில் போதை மருந்து கொடுத்து, சிறுமியை ஒரு வாரமாக ரேப் செய்துள்ளனர். 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!