News April 15, 2024
₹25,000 கோடிக்கு Green Bond வெளியாக வாய்ப்பு

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ₹20,000 கோடி முதல் ₹25,000 கோடி வரையிலான பசுமைப் பத்திரங்களை வெளியிட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இந்திய அரசின் பத்திரங்கள் மீது உலக முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், முதல் அரையாண்டில் பசுமைப் பத்திரங்கள் மூலம் ₹12,000 கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது ஆண்டு இறுதியில் ₹25,000 கோடி வரை இருக்கலாம்.
Similar News
News April 29, 2025
அமெரிக்காவின் துரோகம்: மார்க் கார்னி வெற்றிப் பேச்சு

அமெரிக்க துரோகத்தை கனடா மக்கள் ஒருபோதும் மறக்க வேண்டாம் என அந்நாட்டின் <<16252207>>PM <<>>மார்க் கார்னி கூறியுள்ளார். அதோடு, கனடாவை வலுவாக்க மக்கள் உத்தரவிட்டுள்ளனர் எனக் கூறிய PM, வரவுள்ள நாள்களும், மாதங்களும் மிகுந்த சவாலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். பெரும்பான்மையை நெருங்காவிடிலும், சிறு கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை அமைக்கும் நிலையில் லிபரல் கட்சி உள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
News April 29, 2025
இன்றுடன் சட்டப்பேரவை நிறைவடைந்தது..

சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். மார்ச் 14-ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில், இலவச பட்டா விதிகளில் திருத்தம், கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன. ஆளும் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்ற நிலையில், இன்றுடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
News April 29, 2025
தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்

அட்சய திருதியை என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம் தான். ஏனெனில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கம், செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. இன்று மாலை 5.31 மணி முதல் நாளை மதியம் 2.12 மணி வரை அட்சய திருதியை நடைபெறவுள்ளது. குறிப்பாக, நாளை அதிகாலை 5.41 மணி முதல் மதியம் 12.18 மணி வரை சுப முகூர்த்தமாகும். இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் கொழிக்கும்.