News December 5, 2024
புயல் வேகத்தில் ₹2000 நிவாரணம்: இதுதான் காரணம்?

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ₹2000 நிவாரணம் வழங்கும் பணியை TN அரசு தொடங்கியுள்ளது. ₹5000 அறிவித்த புதுச்சேரியில் நிவாரணத் தொகையை உயர்த்தி தருமாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் எதிர்கட்சிகள் நிவாரணத் தொகையை உயர்த்தி அளிக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. இதனால், எதிர்ப்பு எழுவதற்கு முன்பே மக்கள் கையில் ₹2,000ஐ சேர்க்க அரசு புயல் வேகம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
Similar News
News November 26, 2025
BREAKING: 15 இடங்களில் ED அதிரடி ரெய்டு

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ₹2,438 கோடி அளவிலான ஆருத்ரா கோல்ட் மோசடி தொடர்பாக ஏற்கெனவே பொருளாதார குற்றப்பிரிவு(Economic Offences Wing) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வழக்கு தொடர்பாகவே இன்று இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
News November 26, 2025
ATM-ல் பணம் வரலையா? பேங்க் உங்களுக்கு fine கட்டும்!

ATM மெஷினில் பணம் வராமல், அக்கவுண்ட்டில் இருந்து பணம் Debit ஆனதாக மெசேஜ் வந்துவிட்டதா? டென்ஷன் ஆக வேண்டாம். இதுகுறித்து உங்கள் வங்கிக்கு சென்று புகாரளியுங்கள். ஒருவேளை அந்த புகாரின்மீது பேங்க் நடவடிக்கை எடுக்க 7 நாள்களுக்கு மேல் ஆனால், நாள் ஒன்றுக்கு 100 ரூபாயை உங்களுக்கு அபராதமாக செலுத்தவேண்டும். பேங்க் இந்த அபராத தொகையை செலுத்த மறுக்கும் பட்சத்தில் RBI-ல் நீங்கள் புகாரளிக்கலாம். SHARE.
News November 26, 2025
சற்றுமுன்.. விலை மொத்தம் ₹5,000 உயர்ந்தது

வெள்ளி விலை மீண்டும் ஏறுமுகத்தை கண்டுள்ளது. நேற்று(நவ.25) கிலோவுக்கு ₹3,000, இன்று ₹2,000 என மொத்தம் ₹5,000 உயர்ந்துள்ளது. இதனால், 1 கிராம் ₹176-க்கும், கிலோ ₹1,76,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை கடந்த 2 நாள்களில் மட்டும் 3% உயர்ந்து 1 அவுன்ஸ் 52.75 டாலருக்கு விற்பனையாகிறது. இதனால், வரும் நாள்களில் இந்தியாவில் வெள்ளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.


