News December 5, 2024

புயல் வேகத்தில் ₹2000 நிவாரணம்: இதுதான் காரணம்?

image

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ₹2000 நிவாரணம் வழங்கும் பணியை TN அரசு தொடங்கியுள்ளது. ₹5000 அறிவித்த புதுச்சேரியில் நிவாரணத் தொகையை உயர்த்தி தருமாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் எதிர்கட்சிகள் நிவாரணத் தொகையை உயர்த்தி அளிக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. இதனால், எதிர்ப்பு எழுவதற்கு முன்பே மக்கள் கையில் ₹2,000ஐ சேர்க்க அரசு புயல் வேகம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

Similar News

News December 24, 2025

வெள்ளி விலை இன்று ஒரே நாளில் ₹10,000 உயர்ந்தது!

image

இது என்னடா..! வெள்ளிக்கு வந்த வாழ்வு என வாயைப் பிளக்கும் வகையில் வெள்ளி விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று கிலோவுக்கு ₹3,000 அதிகரித்த நிலையில், இன்று ஒரே நாளில் ₹10,000 அதிகரித்து ₹2,44,000-ஐ தொட்டுள்ளது. சில்லறை விலையில் 1 கிராம் ₹244-க்கு விற்பனையாவதால் வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் உச்சபட்ச மகிழ்ச்சியில் உள்ளனர். வரும் நாள்களில் வெள்ளியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

News December 24, 2025

MGR நினைவிடத்தில் EPS எடுத்த சபதம்

image

MGR-ன் 38-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் EPS தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அதிமுக ஆட்சி மீண்டும் மலர உழைப்போம் என அனைவரும் சபதம் எடுத்துக்கொண்டனர். ஒரு இயக்கத்தை மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் கனவுகளை உருவாக்கி சென்றவர் MGR என புகழ்ந்த EPS, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட MGR-ன் வழியை பின்பற்றுவோம் என்று உறுதியேற்றார்.

News December 24, 2025

கணவரை கிரைண்டரில் அரைத்த மனைவி.. அதிர்ச்சி

image

உ.பி.,யில் கடந்த 15-ம் தேதி தலை, கை, கால் இல்லாத <<18646428>>உடல் <<>>கிடைக்கிறது. அதில், ‘ராகுல்’ என்ற டாட்டூ இருக்க, காணாமல் போனவர்களின் லிஸ்ட்டில் போலீசார் தேடினர். கணவரை காணவில்லை என ரூபி என்பவர் புகார் அளித்திருப்பதும், ராகுலின் போன் நவ.18-ம் முதல் Switch off ஆகியிருப்பதும் தெரியவந்தது. விசாரணை நடத்தியதில், காதலருடன் சேர்ந்து கணவனை கொன்று, கிரைண்டரில் துண்டு துண்டாக நறுக்கியதை ரூபி ஒப்புக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!