News March 17, 2025
கிறிஸ் கெயில் பெயரில் ₹2.8 கோடி மோசடி!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் பெயரை பயன்படுத்தி தன்னிடம் ₹2.8 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக 60 வயது மூதாட்டி புகார் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரான அவர், காபி பவுடர் கம்பெனிக்கு கிறிஸ் கெயில் தான் புரமோட்டராக இருந்து முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி மோசடி செய்ததாக கூறியுள்ளார். இதில் தனது சகோதரர் உள்பட 6 பேர் உடந்தையாக இருந்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
Similar News
News March 18, 2025
70 கோடி பார்வைகளை கடந்த ‘அரபிக் குத்து’

விஜயின் துள்ளலான நடனம், சிவகார்த்திகேயனின் வரிகள், அனிருத்தின் இசையென அரபிக் குத்து பாடலுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. பீஸ்ட் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானாலும்,
‘அரபிக் குத்து’ பாடல் இன்றும் ரசிகர்களுக்கு சலிக்கவில்லை. யூடியூபில் மட்டும் இந்த பாடலின் வீடியோ 70 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
News March 18, 2025
வாடகை வீட்டுக்கு மாறும் ஷாருக்கான்… காரணம் இதோ!

மும்பையில் மன்னட் என்ற அரண்மனையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். அரண்மனை புதுப்பிக்கப்பட இருப்பதால் அங்கிருந்து தற்காலிகமாக வெளியேறும் அவரது குடும்பம், பாலி ஹில்லில் பட தயாரிப்பாளர் வாசு பாக்னானிக்கு சொந்தமான 2 அபார்ட்மெண்ட்களில் குடிபெயர உள்ளது. இதற்கான மாத வாடகை மட்டும் ரூ.24 லட்சமாம். ‘மன்னட்’ புனரமைப்பு சுமார் 3 ஆண்டுகள் நடைபெறும் என கூறப்படுகிறது.
News March 18, 2025
உம்ரான் மாலிக்கிற்கு பதில் இவரா?

காயம் காரணமாக KKR வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதில் குஜராத்தை சேர்ந்த சேத்தன் சக்காரியாவை கொல்கத்தா அணியில் இணைந்துள்ளது. 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அவர் 20 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் KKR மற்றும் RCB அணிகள் ஈடன் கார்டன்ஸில் மோதுகின்றன.