News August 2, 2024

கேரளாவிற்கு ₹15 லட்சம் நிதி : திருமா

image

வயநாட்டில் நிலச்சரிவுப் பேரிடரால் மக்கள் குடும்பம் குடும்பமாகப் பலியாகியுள்ளனர் என்று திருமாவளவன் வேதனையுடன் இரங்கல் தெரிவித்துள்ளார். புதையுண்ட பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. இப்பேரிடரை “தேசியப் பேரிடராக” அறிவிக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்திய அவர், இப்பேரிடரை எதிர்கொள்ளும் கேரள அரசுக்கு விசிக சார்பில் ₹15 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Similar News

News December 5, 2025

சிறுபான்மையினரை தாஜா செய்யும் திமுக: அண்ணாமலை

image

திருப்பரங்குன்றத்தில் மோசடியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்ற இஸ்லாமியர்களே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் சிறுபான்மையினரை தாஜா செய்வதற்காக திமுக அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் 161 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

News December 5, 2025

சற்றுமுன்: விஜய் அதிரடி உத்தரவு

image

பூத் முகவர், SIR பணிகள் உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் குறித்து தவெக நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க விஜய் முடிவு செய்துள்ளார். அதன்படி, தவெகவின் கிளை நிர்வாகிகளை நேரில் அழைத்து டிச.6, 7 ஆகிய தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், பூத் என்றால் என்ன?, SIR என்றால் என்ன? என்பது பற்றியும், உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

News December 5, 2025

சங் பரிவார் அமைப்புகளுக்கு பா.ரஞ்சித் எச்சரிக்கை

image

தமிழகத்தில் மதவாத அரசியலை துவங்குவதற்கான வாய்ப்பை பாஜகவும், அதன் சங் பரிவார் அமைப்புகளும் கடந்த ஓராண்டாக உருவாக்கி வந்ததாக பா.ரஞ்சித் குற்றஞ்சாட்டியுள்ளார். பன்முகத்தன்மையை பாஜக, சங் பரிவார் அமைப்புகள் சிதைக்கிறது என்றும் விமர்சித்துள்ளார். சிறுபான்மை சமூகங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இந்த அமைப்புகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசை வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!