News December 5, 2024
ரேஷன் அட்டைக்கு ₹10,000 வேண்டும்: பிரேமலதா

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு தலா ₹10,000 நிவாரணம் வழங்க பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், 50% பாதிப்புகள் தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. எனவே முறையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ₹1 லட்சம் வழங்கத் அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News September 14, 2025
PAK வீரரின் உருவ பொம்மையை எரித்த ஆம் ஆத்மியினர்

ஆசிய கோப்பை தொடரில், இன்று IND – PAK அணிகள் மோதுகின்றன. இதற்கு உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாக்., வீரர் ஃபஹீம் அஷ்ரப்பின் உருவ பொம்மையை, டெல்லி ஆம் ஆத்மி தலைவர் செளரப் பரத்வாஜ் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, பஹல்காம் தாக்குதலின்போது பாரதமாதாவை அவதூறாக சித்தரித்த பதிவை அஷ்ரப் வெளியிட்டிருந்தார்.
News September 14, 2025
புகழ் எல்லாம் கொஞ்ச காலம் தான்: சமந்தா

ஒரு நடிகைக்கு, புகழ், ரசிகர் பட்டாளம் என்பது கொஞ்ச காலம் மட்டுமே என சமந்தா தெரிவித்துள்ளார். நடிகையின் வாழ்க்கை நீண்டது அல்ல என்ற அவர், இதை உணர்ந்துகொள்வது தனது வாழ்வில் மிகவும் முக்கியமானதாக இருந்ததாகவும் கூறியுள்ளார். மயோடிசிஸ் நோயிலிருந்து மீண்டு வந்தது, நாக சைதன்யாவுடனான பிரிவு என சில காலம் சோகத்தில் ஆழ்ந்திருந்தார். இந்நிலையில், கடந்த சில நாள்களாக வாழ்க்கை முறை குறித்து பேசி வருகிறார்.
News September 14, 2025
BREAKING: நாளை முதல் மாதம் ₹2,000.. தமிழக அரசு அறிவிப்பு

பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை CM ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சமூக நலத்துறை மூலம் மாநிலம் முழுவதும் 3 லட்சம் விண்ணப்பங்கள் அனுப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகையுடன் குழந்தைகளின் அனைத்து விதமான கல்விச் செலவுகளையும் ஏற்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.