News August 22, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கிய (ஜூலை 15) முதல் வாரத்தில் விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்து ஆகஸ்ட் 28-ம் தேதி விவரங்கள் வெளியாகும் என அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதிதாக திட்டத்தில் இணைபவர்களுக்கு பணம் வரவு வைப்பது தொடர்பான அறிவிப்பை செப். 15-ல் அரசு வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.
Similar News
News March 6, 2026
விஜய் விவாகரத்து சர்ச்சை… த்ரிஷாவின் புதிய PHOTOS

விஜய் – சங்கீதா விவாகரத்து சர்ச்சையில் நடிகை த்ரிஷாவின் பெயரும் அடிபடுகிறது. இதற்கிடையே, <<19308601>>விஜய் – த்ரிஷா<<>> இருவரும் நேற்று ஒன்றாக திருமண நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். இதனால், த்ரிஷாவை SM-ல் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் அணிந்த அதே ஆடையில் எடுத்த போட்டோஸை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள த்ரிஷா, ‘எப்போதும் தனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி’ எனக் குறிப்பிட்டு ❤️ எமோஜியை பதிவிட்டுள்ளார்.
News March 6, 2026
UPSC தேர்வில் 2-ம் இடம் பிடித்த தமிழக மாணவி

TN-ல் துணை ஆட்சியராக பணியாற்றும் ராஜேஸ்வரி சுவி UPSC தேர்வில் 2-ம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த அவர், ஏற்கெனவே TNPSC குரூப் 1 தேர்வில் மாநில அளவில் 11-வது இடம் பிடித்து துணை ஆட்சியராக உள்ளார். 2018-ம் ஆண்டு தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்த அவர், போட்டி தேர்வுக்கு தீவிரமாக படித்து இன்று IAS அதிகாரியாக உயர்ந்துள்ளார். இந்த சிங்கப் பெண்ணை வாழ்த்தலாமே!
News March 6, 2026
கடைசி தோட்டா இருக்கும் வரை போராடுவோம்: ஈரான்

அமெரிக்க – இஸ்ரேல் படையெடுப்பை எதிர்த்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே கூறினார். கடைசி தோட்டாவும் கடைசி வீரரும் களத்தில் இருக்கும் வரை போராடுவோம் என்றும் கூறியுள்ளார். <<19300689>>IRIS தேனா கப்பல்<<>> இந்தியாவின் அழைப்பின் பேரில் வந்ததாகவும், எந்த ஆயுதங்களும் இல்லாத நிராயுதபாணிகளை அமெரிக்கா தாக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.


