News October 20, 2025

₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. வந்தது புதிய அப்டேட்

image

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வரும் டிச.15-ல் பணம் கிடைக்கும் என அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், முகாம்களில் விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் அடுத்த வாரத்திலிருந்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது, விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்கள், செல்போன் எண், ஆதார், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட தகவல்கள் சரிபார்க்கப்படவுள்ளன.

Similar News

News March 4, 2026

சூடு சொரணை இல்லாத காங்கிரஸார்: விஜயதரணி

image

காங்கிரஸில் இன்று 99% பேர் திமுக கூட்டணி வேண்டாம் என்று சொல்வதாக விஜயதரணி தெரிவித்துள்ளார். சூடு சொரணை இல்லாத 1% பேர்தான் திமுக அரசிடம் சில பல சலுகைகளை அனுபவித்துக்கொண்டு அங்கு இருக்க வேண்டும் என சொல்கிறார்கள் என சாடியுள்ளார். 23 வருடமாக தன் இளமை காலத்தையெல்லாம் காங்கிரஸில் செலவு செய்ததாகவும், மக்கள் பணி செய்ய நினைத்தபோது இடையூறு தந்ததால் அக்கட்சியில் இருந்து வெளியேறியதாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 4, 2026

திமுக காங்கிரஸ் இழுபறி இன்று முடிவுக்கு வருமா?

image

திமுக காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பெரும் இழுபறியில் உள்ளது. மற்றொரு பக்கம் தவெக தரப்பிலும் காங்கிரஸ் பேசி வருவதாக செய்தி வெளியானதால் அக்கட்சி நிர்வாகிகளே குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் திமுக – காங்., பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக தரப்பில் அதிகபட்சமாக 29 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

News March 4, 2026

வங்கிக் கணக்கில் பணம்.. உடனே செக் பண்ணுங்க

image

PM KISAN திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 விரைவில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் பயனாளிகளின் விவரங்கள் மாறியிருந்தால் அடுத்த தவணையை பெற முடியாது. எனவே, உங்கள் விவசாய அடையாள அட்டையில் எண்ணில் உள்ள ஆதார் எண், புதிய வங்கிக் கணக்கு, மாற்றப்பட்ட முகவரி என ஏதேனும் மாறியிருக்கிறதா என செக் செய்யவும். மாற்றமிருப்பின், வேளாண் அலுவலகத்திற்குச் சென்று மாற்றிக் கொள்ளுங்கள்.

error: Content is protected !!