News December 5, 2024

வங்கிக் கணக்கு இருந்தால் தான் ₹1,000 பொங்கல் பரிசு?

image

பொங்கல் பரிசாக ரூ.1000-ஐ பொதுமக்கள் வங்கிக் கணக்கில் அரசு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கினால் தான், பொங்கல் பரிசு கிடைக்கும் என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், அது உண்மையில்லை, பொங்கல் பரிசு வழங்குவதற்கும், கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 16, 2025

நகைக்கடன்.. வங்கிக்கு படையெடுக்கும் தமிழக மக்கள்

image

2021 தேர்தலை போலவே, 2026 தேர்தலையொட்டி நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால், இதுவரை நகை அடமானக் கடன் வாங்காதவர்களும் கூட 3 – 5 சவரன் வரை நகைகளை வைத்து கடன் பெற, கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடனுக்கு இலக்கைவிட அதிக தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News September 16, 2025

மூலிகை: ஏழைகளின் நோய் விரட்டி எருக்கு!

image

விஷம் என ஒதுக்கும் எருக்கம் செடியில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடப்பதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது *செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதில், எருக்க இலையை அடுக்கிக் காலால் மிதித்தால், குதிகால் வலி நீங்கும் *செடியின் இலைகளை நெருப்பில் போட்டு எரித்து, அந்த புகையை சுவாசித்தால் மார்புச்சளி கட்டுப்படும் *இலையை நெருப்பில் வாட்டி, கட்டிகள் மேல் கட்டினால், அவை உடையும். SHARE IT.

News September 16, 2025

பாக்.,வுடன் கைகுலுக்கவேண்டிய கட்டாயம் இல்லை: BCCI

image

ஆசிய கோப்பை போட்டியில் PAK அணியினருக்கு இந்திய வீரர்கள் கைக்கொடுக்காமல் போனதற்கு, போட்டி முடிந்தவுடன் கைகுலுக்க வேண்டும் என்பது எந்த விதியிலும் இல்லை என BCCI விளக்கமளித்துள்ளது. முன்னதாக, இந்தியாவின் இந்த செயலால் கடும் அதிருப்திக்கு உள்ளான பாக்., ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் புகாரளித்திருந்தது. இதனால், போட்டி முடிந்தவுடன் கைக்கொடுப்பது கட்டாயம் இல்லை என BCCI-யின் அதிகாரி கூறியுள்ளார்.

error: Content is protected !!