News December 5, 2024
வங்கிக் கணக்கு இருந்தால் தான் ₹1,000 பொங்கல் பரிசு?

பொங்கல் பரிசாக ரூ.1000-ஐ பொதுமக்கள் வங்கிக் கணக்கில் அரசு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கினால் தான், பொங்கல் பரிசு கிடைக்கும் என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், அது உண்மையில்லை, பொங்கல் பரிசு வழங்குவதற்கும், கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
BREAKING: நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கையை அடுத்து நாளை (டிச.4) சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தொடர்ந்து 3-வது நாளாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 3, 2025
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குக: இன்பதுரை

டிட்வா புயல் & மழை வெள்ள பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க திமுக அரசு தவறிவிட்டதாக அதிமுக MP இன்பதுரை ராஜ்யசபாவில் குற்றம் சாட்டினார். விவசாய நிலங்கள் மொத்தமும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பருவமழை காலத்திற்கு முன்பே வாய்க்கால்களை தூர்வார EPS பலமுறை வலியுறுத்தியும், அதை செய்ய திமுக அரசு தவறிவிட்டது என சாடிய அவர், நீரில் மூழ்கியுள்ள பயிர்களை உடனே கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
News December 3, 2025
கனமழை கொட்டும்.. 17 மாவட்டங்களுக்கு அலர்ட்

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருச்சி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரே இடத்தில் நீடிப்பதால், மழை தொடர்ந்து பெய்யும் என்றும் IMD கூறியுள்ளது.


