News April 25, 2025
₹1000 கோடி முதலீடு… தொழில்துறையை ஈர்க்கும் TN

தமிழ்நாட்டில் மேலும் ₹1000 கோடி முதலீடு செய்வதாக சாம்சங் நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர் சாம்சங் தொழிலாளர் பிரச்சனையை CM ஸ்டாலின் திறம்பட கையாண்டதாகவும் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் கியா நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வராமல் வேறு மாநிலத்திற்கு சென்றதாகவும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
அப்போ ஓடாத அஞ்சான் இப்போ எப்படி இருக்கு?

‘அஞ்சான்’ படத்தை Re-edit செய்து மீண்டும் வெளியாகிறது. இப்படத்தின் பிரஸ் ஷோவை பார்த்தவர்கள், படம் தற்போது ஓரளவு நன்றாக இருப்பதாகவே தெரிவித்துள்ளனர். படத்தின் நீளத்தை குறைத்து, எடிட்டிங்கின் மூலம், ஸ்கிரீன்பிளே சற்று மாற்றி இருப்பதாக குறிப்பிடுகின்றனர். படத்தின் சவுண்ட் & Picture Quality-ம் நன்றாக இருப்பதாகவும் சொல்கின்றனர். படம் நாளை ரிலீசாக உள்ளது. உங்களுக்கு ‘அஞ்சான்’ படம் பிடிக்குமா?
News November 27, 2025
வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த திட்டமா?

USA வெள்ளை மாளிகை அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்தனர். இருவரும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், இது திட்டமிடப்பட்ட தாக்குதல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ஆப்கன் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த திட்டமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், வாஷிங்டனில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
News November 27, 2025
பாமகவில் சமரசம் செய்கிறாரா செல்வப்பெருந்தகை?

அன்புமணியும், ராமதாஸும் இணைந்து செயல்பட்டால் நல்லதுதான். ஆனால் அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியை எடுக்கவில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக ராமதாஸ் தனக்கு பரிச்சயமானவர் என்ற அவர், அதனால்தான் ஹாஸ்பிடலில் இருந்தபோது அவரை சந்தித்ததாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், இதில் எந்த அரசியல் கலப்பும் இல்லை எனவும் சமரச தூதுவராக செயல்பட அவசியமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


