News October 25, 2024

நடத்துநரின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிவாரணம்

image

சென்னை மாநகர பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் குடும்பத்துக்கு ₹10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நடத்துநர் ஜெகன்குமாருக்கும், போதையில் இருந்த பயணி கோவிந்தனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இதில் கீழே விழுந்த நடத்துநர் ஜெகன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஜெகனின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 23, 2025

காசே கட்டவேணாம்; ₹7 லட்சம் இலவச காப்பீடு

image

ஒரு ரூபாய் பிரீமியம் கூட செலுத்தாமல் EPFO-வில் ஊழியர்கள் ₹7 லட்சம் வரை ஆயுள் காப்பீடு பெறலாம். ஊழியர் ஒருவர் இறந்தால், அவரது குடும்பம் அல்லது நாமினி, ₹2.5 லட்சம் முதல் ₹7 லட்சம் வரை காப்பீடு தொகையாக பெற முடியும். ஊழியரின் கடைசி 12 மாத சராசரி சம்பளத்தின் அடிப்படையில் காப்பீடு தொகை கணக்கிடப்படும். EPFO போர்ட்டலில் உள்ள “Death claim filing by beneficiary”-ல் இத்தொகையை பெறலாம். SHARE THIS.

News October 23, 2025

நடிகை மனோரமாவின் மகன் காலமானார்

image

தமிழ் திரையுலகில் மறக்க முடியாத எவர்கிரீன் நடிகையான மனோரமாவின் மகன் பூபதி(70) காலமானார். மூச்சு திணறல் பிரச்னைக்காக கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. இவர், விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமாகி பல படங்கள், சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

News October 23, 2025

BREAKING: 14 மாவட்டங்களில் இன்று கனமழை

image

கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதேபோல், நாளை(அக்.24) கோவை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!