News October 25, 2024
நடத்துநரின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிவாரணம்

சென்னை மாநகர பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் குடும்பத்துக்கு ₹10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நடத்துநர் ஜெகன்குமாருக்கும், போதையில் இருந்த பயணி கோவிந்தனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இதில் கீழே விழுந்த நடத்துநர் ஜெகன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஜெகனின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக IMD தெரிவித்துள்ளது. இது சென்னைக்கு 30 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது இன்று இரவு சென்னை – பாண்டிச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
News December 2, 2025
தூங்காமல் நான் காணும் சொப்பனமே..

சில்லென்ற காற்றாய் வந்து, கனவாய் கலைந்த சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் இன்று. நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில், அந்தக்கால 80ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமல்ல, 90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என ஜெனரேஷன் கடந்தும் கனவுக்கன்னியாக இருக்கிறார் சில்க். தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் பலரும் இவரின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்த காலமும் உண்டு. உங்களுக்கு பிடித்த சில்க் ஸ்மிதா பாட்டு எது? COMMENT IT.
News December 2, 2025
இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சமீபமாக பொய்யான வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை குவைத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டெல்லி ஏர்போர்ட்டிற்கு வந்த இமெயிலில், விமானத்தில் ‘மனித வெடிகுண்டு’ இருப்பதாக கூறப்பட்டது. உடனடியாக விமானம் மும்பை ஏர்போர்ட்டில் தரையிறக்கப்பட்டு, பயணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், இது போலியான மிரட்டல் என்பது தெரியவந்தது.


