News October 25, 2024

நடத்துநரின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிவாரணம்

image

சென்னை மாநகர பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் குடும்பத்துக்கு ₹10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நடத்துநர் ஜெகன்குமாருக்கும், போதையில் இருந்த பயணி கோவிந்தனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இதில் கீழே விழுந்த நடத்துநர் ஜெகன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஜெகனின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 24, 2025

இன்று புதிய தலைமை நீதிபதி பதவியேற்கிறார்

image

இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக (CJI) சூர்யகாந்த் இன்று பதவியேற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதில் பூடான், கென்யா, மலேசியா, மொரிசியஸ், இலங்கை, நேபாள் தலைமை நீதிபதிகள் பங்கேற்க உள்ளனர். CJI பதவியேற்பு விழாவில் வெளிநாட்டினர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். அதேபோல், ஹரியானாவிலிருந்து பதவியேற்கும் முதல் CJI சூர்யகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 24, 2025

BREAKING: 14 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை.. முழு விபரம்

image

கனமழை எதிரொலியால் இதுவரை 14 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிதாக நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, கரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தென்காசி, நெல்லை, திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 24, 2025

வாழனும், செமயா வாழனும்: மிருணாள் தாகூர்

image

தன்னை இகழ்ந்தவர்களுக்கு முன்பு நன்றாக வாழ்ந்து காட்டுவதே தனி கெத்து தான். அப்படித்தான், தனது அம்மாவை காரில் ஏற்ற மறுத்த உறவுக்காரர்களுக்கு முன், பென்ஸ் கார் வாங்கி, அதில் அம்மாவை அமர வைத்து உலா வந்து கெத்து காட்டியுள்ளார் மிருணாள் தாகூர். உறவினர்கள் தனது அம்மாவை அவமானப்படுத்தியபோது ஏற்பட்ட வைராக்கியமே, தான் கார் வாங்கியதற்கான காரணம் என்றும் அவர் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

error: Content is protected !!