News October 25, 2024
நடத்துநரின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிவாரணம்

சென்னை மாநகர பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் குடும்பத்துக்கு ₹10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நடத்துநர் ஜெகன்குமாருக்கும், போதையில் இருந்த பயணி கோவிந்தனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இதில் கீழே விழுந்த நடத்துநர் ஜெகன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஜெகனின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 10, 2026
காங்கிரஸின் 3வது பிளான்.. கார்த்தி சிதம்பரம் Open Talk

தவெகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருக்கிறதா என கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அரசியலில் என்னென்ன ஆப்ஷன்ஸ் இருக்கிறது என்ற சிந்தனை இருக்கத்தானே செய்யும் என்றார். மேலும், திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக 3வது செயல்திட்டம், அதிகார ஆசை, விரிவாக்கப்பட்ட சிந்தனை இருக்கக்கூடாதா என கேட்ட அவர், அதுபோன்ற சிந்தனைகள் இருந்தால்தான் நல்லது என கூறி உண்மையை உடைத்தார்.
News January 10, 2026
ஜன நாயகனில் சர்ச்சைக்குரிய காட்சிகள்: H.ராஜா

ஜனநாயகன், பராசக்தி படங்களுக்கு சிக்கல் ஏற்பட படக்குழுக்களே காரணம் என H.ராஜா கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய காட்சிப் பதிவுகள் இருப்பதாலேயே தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் உள்ளதாகவும், இதில் மத்திய அரசை குற்றம் சுமத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், TN-ஐ பொறுத்தவரை ஆளுங்கட்சி நடத்தும் நிறுவனங்களின் தயவு இன்றி எந்த படத்தையும் வெளியிட முடியாது எனவும் அவர் பேசியுள்ளார்.
News January 10, 2026
CM தொகுதியில் ஸ்கெட்ச் போடுகிறதா தவெக?

திமுகவின் ஆதரவாளராக இருந்து வந்த நாஞ்சில் சம்பத் சமீபத்தில் தவெகவில் இணைந்தார். திமுகவுக்காக பல பொதுக்கூட்ட மேடையில் ஏறி பேசிய அவரை தற்போது தவெகவுக்காக பேச இறக்கிவிட விஜய் திட்டமிட்டிருக்கிறாராம். அதிலும், முதல் தொகுதியாக CM ஸ்டாலினின் கொளத்தூரில் அவர் பேச நாஞ்சில் சம்பத்தே விருப்பம் காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்பீச்சில் திமுகவை அவர் கடுமையாக விமர்சிக்கலாம் என்கின்றனர்.


