News April 10, 2024
ஹேமமாலினி குறித்து அவதூறு; காங்., பிரமுகருக்கு நோட்டீஸ்

ஹேமமாலினி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்., தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியத்தை குறைக்கும் வகையிலான பேச்சுகளில் யாரும் ஈடுபடக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக. இது குறித்து பேசிய ரந்தீப் சுர்ஜேவாலா, “நான் பேசியதை வெட்டி ஒட்டியுள்ளார்கள், அவதூறாக எதையும் பேசவில்லை” என்று தெரிவித்தார்.
Similar News
News April 26, 2025
பில்கேட்ஸின் தன்னம்பிக்கை வரிகள்..!

▶ வெற்றி ஒரு மோசமான ஆசிரியர். அது புத்திசாலிகளை மயக்கி தோல்வியே இல்லை என்ற எண்ணத்தை தூண்டும். ▶ வெற்றியைக் கொண்டாடுவது சிறப்பானது. ஆனால் தோல்வியின் படிப்பினைகளைக் கவனிப்பதும் அவசியம். ▶ உலகில் உள்ள எவருடனும் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்… அப்படிச் செய்தால், உங்களை நீங்களே அவமதித்துக் கொள்கிறீர்கள் என அர்த்தம். ▶ பிரச்னைகள் இருக்கும் இடத்திலேயே அதற்கான தீர்வையும் தேடுகிறேன்.
News April 26, 2025
சமந்தா அழுதால் நானும் அழுவேன்: பிரபல இயக்குநர்

நடிகை சமந்தா குறித்து இயக்குநர் சுதா கொங்கரா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தான் சமந்தாவின் மிகப் பெரிய ரசிகை என்றும், 5 ஆண்டுகளாக அவருடன் டச்சில் இருப்பதாகவும் சுதா தெரிவித்துள்ளார். மேலும், சமந்தா அழுதால், தானும் அழுவேன் என தெரிவித்த அவர், சமந்தாவின் போராடும் குணம் தனக்கு பலம் தருவதாக குறிப்பிட்டார். ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் மிகவும் பிடிக்கும் என்றும் சுதா வேடிக்கையாக கூறியுள்ளார்.
News April 26, 2025
அதிநவீன ஆயுதம்.. வரலாறு படைத்த இந்தியா!

பாக். உடனான போர் பதற்ற சூழலில், ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனையில் இந்தியா வரலாறு படைத்துள்ளது. Scramjet Engine-ஐ DRDO வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒலியைவிட 5 மடங்கு வேகம், அதாவது மணிக்கு 6,100 கி.மீ.க்கும் அதிகமாக பயணித்து, இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை இந்த இஞ்சினுக்கு உண்டு. இதன்மூலம், அடுத்த தலைமுறை ஏவுகணை உருவாக்கத்தில் இந்தியா முன்னேறியுள்ளது.