News March 29, 2025

ஹீட்டரில் கையைவிட்ட சிறுவன் தூக்கி வீசப்பட்டு பலி

image

தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் – தாட்சாயணி தம்பதி. இவர்களது மகன் தமிழரசன் (12) நேற்று (மார்ச் 28) மதியம் குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் மூலம் சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் சுட வைத்தார். தண்ணீர் சூடாகிவிட்டதா என்பதை அறிய ஹீட்டரில் கை வைத்த பார்த்தபோது, தமிழரசன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News January 10, 2026

செங்கை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

செங்கல்பட்டு மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 10, 2026

செங்கை: மழையால் மின்தடையா? உடனே CALL!

image

செங்கல்பட்டு மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்யவர். (அ) 9445850811 இந்த வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் செய்யலாம். SHARE IT!

News January 10, 2026

தாம்பரம்: 3 பேர் அதிரடி கைது!

image

வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தாம்பரம் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா மற்றும் ஹெராயின் கடத்திய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சரோஜ் குமார் (51), சகஜான் (31), ரகுமான் (38) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 25 கிலோ கஞ்சா மற்றும் 5 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து போதைப்பொருட்களைக் கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

error: Content is protected !!