News August 25, 2024
ஹிந்தியில் கடிதம் எழுதிய தமிழக கட்சி

நாமக்கல், மோகனூரை தலைமை இடமாக கொண்டு விவசாய முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது அதன் பொதுச்செயலாளராக பாலசுப்ரமணியன் இருந்து வருகிறார். இந்த அமைப்பு பொதுமக்களுக்காக போராடி வருகிறது. இதனிடையே காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக முயற்சி செய்கிறது. இதை தடுப்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கு விமுக பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் ஹிந்தியில் கடிதம் எழுதியுள்ளார்.
Similar News
News December 5, 2025
அடடே! நாமக்கல்லுக்கு கிடைத்த பெருமை!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் ஐந்து பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. அதில் நாமக்கல் சோப்புக்கல் சமையல் பாத்திரங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. சோப்புக்கல் பாத்திரங்கள் வலிமையாகவும், நீடித்த உழைப்புடனும் இருப்பதால், குறைந்தபட்ச பராமரிப்புடன் கூட பல ஆண்டுகள் உடையாமல் இருக்கும். தமிழ்நாட்டில் மொத்தம் 74 புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உள்ளன.
News December 5, 2025
பரமத்தி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

பரமத்தி அருகே வில்லிபாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்(48) என்பவர் விவசாயி. அவரது மனைவி நர்மதாவுடன் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் மனவருத்தம் அடைந்த அவர், சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 5, 2025
நாமக்கல்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


