News March 3, 2025
ஹஜ் பயணிகளுக்கு தங்கும் விடுதி – முதல்வர் அறிவிப்பு

நாகையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்று பேசினார். அப்போது தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களின் நலன் கருதி சென்னையில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் புதிதாக தங்கும் விடுதி கட்டப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பின் போது அரங்கில் கூடியிருந்தோர் கர கோஷம் எழுப்பினர்.
Similar News
News December 18, 2025
நாகை: அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய உடல்!

வேதாரண்யம், மனியன்தீவு கடற்கரையில் ஆண் உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் கடலோர காவல் குழும போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி அங்கேயே பிரேத பரிசோதனை செய்து கடற்கரையில் புதைத்தனர். மேலும் இது யார் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News December 18, 2025
நாகை : பசுமை சாம்பியன் விருது பெற அழைப்பு- -ஆட்சியர்

2025 ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருது பெற சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்மாதிரியான பங்களிப்பை செய்த அலுவலகங்கள் நிறுவனங்கள் பள்ளிகள் கல்லூரிகள் குடியிருப்பு நல சங்கம் ,தனிநபர்கள் உள்ளாட்சி அமைப்பு தொழில் துறைகள் போன்றவற்றிற்கு வழங்கப்பட உள்ளது.www.tnpcp.gov இந்த படிவத்தினை மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஜன. 20க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
News December 18, 2025
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.17) இரவு 10 மணி முதல் இன்று (டிச.18) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


