News March 3, 2025
ஹஜ் பயணிகளுக்கு தங்கும் விடுதி – முதல்வர் அறிவிப்பு

நாகையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்று பேசினார். அப்போது தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களின் நலன் கருதி சென்னையில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் புதிதாக தங்கும் விடுதி கட்டப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பின் போது அரங்கில் கூடியிருந்தோர் கர கோஷம் எழுப்பினர்.
Similar News
News November 27, 2025
நாகை: விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் வயல்கள் ஏதேனும் மழைநீரில் மூழ்கி இருந்தால், பயிர்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீர் வடிந்த பிறகு விவசாயிகள் ஏக்கருக்கு யூரியா, ஜிப்சத்துடன் கூடிய வேப்பம் புண்ணாக்கை வயலில் இடவேண்டும். இதுகுறித்த கூடுதல் தகவல் தேவைப்படுவோர் அருகில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில், மாவட்ட அளவிலான கல்விக் கடன் முகாம், உயர்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடை படிப்புகளுக்கான கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க மற்றும் கல்வி கடன் பற்றிய ஆலோசனைகளை பெற வரும் 27-ஆம் தேதி முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
நாகை இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள்

நாகை மாவட்டத்தில் நேற்று(நவ.26) இரவு 10 மணி முதல் இன்று(நவ.27) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது புகார்களை இதில் குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.


