News March 3, 2025
ஹஜ் பயணிகளுக்கு தங்கும் விடுதி – முதல்வர் அறிவிப்பு

நாகையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்று பேசினார். அப்போது தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களின் நலன் கருதி சென்னையில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் புதிதாக தங்கும் விடுதி கட்டப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பின் போது அரங்கில் கூடியிருந்தோர் கர கோஷம் எழுப்பினர்.
Similar News
News December 4, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

மகளிர் மேம்பாடு, பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு, தமிழக அரசால் ஆண்டுதோறும் அவ்வையார் விருது மற்றும் ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையத்தில் வரும் டிச.31-க்குள் விருதுக்கு விண்ணப்பித்து, அதன் நகலை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
நாகை: ஸ்கூட்டர் வழங்கிய கலெக்டர்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று (டிச.3) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ப .ஆகாஷ் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கே. கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News December 3, 2025
நாகை: போஸ்ட் ஆபிஸ் வங்கியில் வேலை

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் JUNIOR ASSOCIATE / ASSISTANT MANAGER பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 309
3. வயது: 20-35
4. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
5.கடைசி தேதி: 08.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.


