News February 18, 2025

ஸ்ரீவி கொலை வழக்கில் நான்கு பேரை பிடித்து விசாரணை

image

ஸ்ரீவி.வடகரை பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன். இவர் திருமுக்குளத்தில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலியானார். இந்த இறப்பு நிகழ்ச்சிக்காக சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் மாயன் (27) என்பவர் வந்திருந்தார். இவர் நேற்று மாலை சங்கூரணி பகுதியில் உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து ஸ்ரீவி நகர் போலீஸார் வழக்கு பதிந்து 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 8, 2026

விருதுநகர்: EXAM இல்லை.. போஸ்ட் ஆபீஸ் வேலை ரெடி!

image

விருதுநகர் மக்களே அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 8, 2026

விருதுநகர் அருகே பெண் திடீர் தற்கொலை

image

அருப்புக்கோட்டை திருநகரத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன் என்பவரது மனைவி தில்லை சிவகாமி(52). அர்ச்சுணன் கடந்த ஒரு வருடத்திற்கு முன் இறந்த நிலையில் தில்லை சிவகாமி மன சோர்வுடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தில்லை சிவகாமி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.‌ டவுன் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 8, 2026

விருதுநகர் ஒரே நாளில் 415 பேர் கைது

image

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியராக்குவேன் என்ற முதல்வரின் தேர்தல் வாக்குறுதி 313ஐ நிறைவேற்றுதல் உள்பட பல அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் பவுன்தாய் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.
மறியலில் ஈடுபட்ட 415 பேரை சூலக்கரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!