News February 18, 2025

ஸ்ரீவி கொலை வழக்கில் நான்கு பேரை பிடித்து விசாரணை

image

ஸ்ரீவி.வடகரை பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன். இவர் திருமுக்குளத்தில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலியானார். இந்த இறப்பு நிகழ்ச்சிக்காக சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் மாயன் (27) என்பவர் வந்திருந்தார். இவர் நேற்று மாலை சங்கூரணி பகுதியில் உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து ஸ்ரீவி நகர் போலீஸார் வழக்கு பதிந்து 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 23, 2026

ராஜபாளையம் அருகே தீ விபத்தில் பெண் உயிரிழப்பு

image

ராஜபாளையம் அருகே தொம்பக்குளம் நேரு குடியிருப்பைச் சோ்ந்த குணசேகரன் மனைவி கிறிஸ்டிஷோபனா இவா் வீட்டில் தையல் தைக்கும் பணி செய்து வந்தாா். இந்நிலையில் வீட்டில் சமையல் செய்த போது, இவரது சேலையில் தீப்பற்றியது. தீ உடல் முழுவதும் பரவி பலத்த காயமடைந்தாா். இவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்

News February 22, 2026

ஸ்ரீவி: போக்சோ வழக்கில் இளைஞர் கைது

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (26). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவியுடன் கடந்த 2 மாதங்களாக பழகி வந்துள்ளார். அப்போது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஶ்ரீவி.,அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ வழக்கு பதிவு செய்து, சுப்புராஜூவை கைது செய்தனர்.

News February 22, 2026

விருதுநகர்: GH நம்பர் SAVE பண்ணிக்கோங்க..!

image

தலைமை மருத்துவமனை, விருதுநகர் – 04562242722

அருப்புக்கோட்டை – 04566220264

இராஜபாளையம் – 04563221301

காரியாபட்டி – 04566255130

சாத்தூர் – 04562260215

சிவகாசி – 04562220301

திருச்சுழி – 04566282141

ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260220

மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!