News November 23, 2024
ஸ்ரீவி அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

ஸ்ரீவி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் இவரது உறவினரான ரிஷிகேசவனும் ஸ்ரீவில்லிபுத்தூர் – ராஜபாளையம் சாலை, தனியார் வெகேஷனல் சென்டர் அருகே இன்று பைக்கில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி,சாலையின் ஓரத்தில் இருந்த இரும்பு கம்பியில் மோதினர். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரிஷிகேசவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 9, 2025
விருதுநகர்: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

விருதுநகர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 9, 2025
விருதுநகர்: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் வடகாசி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரும், அதே பகுதியை சேர்ந்த மாடசாமியும் லோடுமேன் வேலை செய்து வந்தனர். இருவரும் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 2020-ம் ஆண்டு மாடசாமி இசக்கிமுத்துவை அருவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் குற்றவாளி மாடசாமிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News December 9, 2025
விருதுநகர் அருகே கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

வத்திராயிருப்பு அருகே சேது நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராம்குமார். இவர் நண்பருடன் சேர்ந்து மது குடித்துவிட்டு தனியார் தோப்பில் உள்ள கிணற்றுக்குள் குதித்து குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


