News January 23, 2025

ஸ்ரீவியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

image

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி புலிகள் காப்பக பகுதியாக உள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கேமராவில் சிறுத்தை சுற்றுத்திரியும் காட்சிகள் பதிவாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News

News November 24, 2025

விருதுநகர்: அரசுப்பள்ளி கட்டிட மேற்கூரை பெயர்ந்து சேதம்

image

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் பள்ளியின் கான்கிரீட் மேற்கூரை தொடர்மழையால் இடிந்து விழுந்ததால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

News November 24, 2025

விருதுநகர் அருகே மின்வேலி அமைத்த நபர் கைது!

image

தொப்பலாக்கரையில் நேற்று விவசாய தோட்டத்தில் காட்டுப்பன்றிகளுக்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்ற விவசாயி உயிரிழந்தார். தோட்டத்திற்கு உரம் போடச் சென்றபோது அருகிலுள்ள தங்கப்பாண்டியன் தோட்டத்தில் இருந்த மின் வேலியில் சிக்கி மாரிச்சாமி பலியான நிலையில் பரளச்சி போலீசார் தங்கப்பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவரை கைது செய்தனர்.

News November 24, 2025

விருதுநகர்: நவ.28-க்குள் விண்ணப்பிக்கவும் – ஆட்சியர்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் 2024-2025-ஆம் ஆண்டில் சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகையினை பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. மேலும் ஆர்வமுள்ளவர்கள் tn.gov.in என்ற இணைய தளம் மூலம் நவ.28 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!