News August 3, 2024

ஸ்ரீரங்கத்தில் இளைஞர் அடித்து கொலை

image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க சென்ற மாணவர் அடித்துக்கொடூரமாக கொல்லப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடி பெருக்கையொட்டி, காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராடி வரும் நிலையில், வேடிக்கை பார்ப்பதில் ஏற்பட்ட மோதலில், இக்கொலை அரங்கேறியுள்ளது. திருச்சி மாநகரில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து கொலைகள் நடப்பதால், போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News October 15, 2025

திருச்சி: தடுப்பு சுவரில் டூவீலர் மோதி பலி

image

திருச்சி மாவட்டம், பி.மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரணவ் (58). இவர் நேற்று துறையூரில் உள்ள தனது மகன் பிரபுவை பார்ப்பதற்காக டூவீலரில் சென்றுள்ளார். அப்போது ஆத்தூர் ரவுண்டானா அருகே சென்றபோது, அவரது டூவீலர் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

News October 15, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, வரும் நவ.4, 5 ஆகிய தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. இதில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம். வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 15, 2025

திருச்சி மாவட்டத்தில் 128.3 மி.மீ மழை பதிவு

image

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (அக்.14) மாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மருங்காபுரி கோவில்பட்டியில் 18.1 மி.மீ, துவாக்குடியில் 10.1 மி.மீ, தென்பரநாடு பகுதியில் 15 மி.மீ, துறையூர் பகுதியில் 15 மி.மீ என மாவட்டம் முழுவதும் 128.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 5.35 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!