News August 3, 2024
ஸ்ரீரங்கத்தில் இளைஞர் அடித்து கொலை

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க சென்ற மாணவர் அடித்துக்கொடூரமாக கொல்லப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடி பெருக்கையொட்டி, காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராடி வரும் நிலையில், வேடிக்கை பார்ப்பதில் ஏற்பட்ட மோதலில், இக்கொலை அரங்கேறியுள்ளது. திருச்சி மாநகரில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து கொலைகள் நடப்பதால், போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News October 13, 2025
திருச்சி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருச்சி மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<
News October 13, 2025
திருச்சி: கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு

தில்லை நகரைச் சேர்ந்த சுதர்சன் நேற்று முன்தினம் திருவெறும்பூர் சென்று விட்டு தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வெள்ளி பொருட்கள் மற்றும் வெள்ளி சிலைகள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் விசாரித்த தில்லைநகர் போலீசார் நகைகள் திருடிய விஜயராஜ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்து திருடப்பட்ட பொருட்களை மீட்டனர்.
News October 13, 2025
வெடிகுண்டு மிரட்டல்: திருச்சியில் தீவிர சோதனை

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சோதனை செய்து வருகின்றனர். மின்னஞ்சல் அனுப்பிய நபர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.