News August 3, 2024

ஸ்ரீரங்கத்தில் இளைஞர் அடித்து கொலை

image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க சென்ற மாணவர் அடித்துக்கொடூரமாக கொல்லப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடி பெருக்கையொட்டி, காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராடி வரும் நிலையில், வேடிக்கை பார்ப்பதில் ஏற்பட்ட மோதலில், இக்கொலை அரங்கேறியுள்ளது. திருச்சி மாநகரில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து கொலைகள் நடப்பதால், போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News November 13, 2025

திருச்சி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News November 13, 2025

திருச்சி: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

பொதுமக்களின் நலன் கருதி திருச்சி காவல்துறை நேற்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ATM PIN மற்றும் UPI PIN நம்பர்களை பதிவு செய்யும்போது மற்றவர்கள் பார்க்காதவாறு பதிவு செய்யவும். OTP எண்களை ரகசியமாக வைத்திருப்பது பாதுகாப்பானது. மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம்

News November 13, 2025

திருச்சி: RKT பார்சல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

image

திருச்சி மாநகரில் அமைந்துள்ள RKT ஸ்பீடு பார்சல் நிறுவனத்தில் காலியாக உள்ள ACCOUNTANT உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்த, ஆண் மற்றும் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.13,500 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்

error: Content is protected !!