News August 3, 2024

ஸ்ரீரங்கத்தில் இளைஞர் அடித்து கொலை

image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க சென்ற மாணவர் அடித்துக்கொடூரமாக கொல்லப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடி பெருக்கையொட்டி, காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராடி வரும் நிலையில், வேடிக்கை பார்ப்பதில் ஏற்பட்ட மோதலில், இக்கொலை அரங்கேறியுள்ளது. திருச்சி மாநகரில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து கொலைகள் நடப்பதால், போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News November 9, 2025

திருச்சி: அரசு வேலை – தேர்வு இல்லை!

image

திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 72 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (நவ.9) கடைசி நாளாகும்.
1. கல்வி தகுதி: 10-ம் வகுப்பு
2. சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4. வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE <<>>
6. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 9, 2025

திருச்சி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு திருச்சி வருகிறார். நாளை காலை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பழனியாண்டி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார். இந்த திருமண நிகழ்ச்சி திருச்சி சோமரசம்பேட்டை கலைஞர் திடலில் நடைபெறுகிறது. விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.

News November 9, 2025

திருச்சி மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

image

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி திட்டத்தில் பயன்பெற, விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகள், எவ்வித விடுபாடின்றி பயன்பெறும் வகையில் விரைவாக தனித்துவ அடையாள எண் பெற வேண்டும். இதற்கு அருகில் உள்ள வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!