News May 17, 2024
ஸ்ரீபெரும்புதூர்: கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரிடம், நேற்று(மே 16) இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பத்மநாபன் மற்றும் அரவிந்தன் ஆகியோர் முன் விரோதம் காரணமாக, கத்தியை காட்டி மிரட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். புகாரில் பேரில் இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
Similar News
News October 14, 2025
காஞ்சியில் மர்ம காய்ச்சலில் பலியான சிறுமி

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 32 வது வார்டு பகுதியில் உள்ள ஏகேடி தெரு பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பவரின் இளைய மகள் கார்த்திகா. கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திடீர் மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக பெற்றோர்கள் தெரிவித்ததால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
News October 14, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

காஞ்சிபுரத்தில் இன்று (அக்.13 ) இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 13, 2025
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் யோகிபாபு தரிசனம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சக்தி பீடங்களில் முதன்மையாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். நடிகருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பும், சிறப்பு தீபாராதனை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது, ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.