News August 2, 2024
ஸ்ரீபெரும்புதூரில் ரூ.1,800 கோடியில் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் ஆலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.1,800 கோடியில் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தொழிற்சாலை அமைக்க உள்ளது. 67 ஏக்கரில் ரூ.1,800 கோடி செலவில் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தொழிற்சாலையை அமைக்கிறது. ஆலை கட்டுமான பணிகளின்போது 200 பேருக்கும், தொழிற்சாலை செயல்பட தொடங்கும்போது 3,500 பேருக்கும் வேலை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 19, 2025
காஞ்சி: 12th போதும், ரூ.81,100 சம்பளம்!

காஞ்சிபுரம் மக்களே! எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News September 19, 2025
காஞ்சியில் ஓவியத்தால் தீட்டப்பட்ட அற்புதக் கோயில்!

காஞ்சிபுரம், திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள தீகம்பர சமண ஆலயம் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவால் கிபி 556ல் கட்டப்பட்டது. இங்குள்ள மண்டபத்தில் விஜயநகர கால ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் சமண தீர்த்தங்கரர்களாகிய ரிஷபநாதர், வர்த்தமான மகாவீரர், நேமிநாதர் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையிலுள்ளது. இந்த கோயிலில் உள்ள ஓவியங்களை காண்பதற்காகவே மக்கள் வந்து செல்கின்றனர் என்பது சிறப்பு!
News September 19, 2025
காஞ்சி: மாணவிக்கு பாலியல் தொல்லை!-அதிகாரி கைது!

காஞ்சிபுரத்தை சேர்ந்த 17 வயது மாணவி, சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சென்னைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தபோது, பின்னால் அமர்ந்திருந்த ராகேஷ் என்பவர் இவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். பேருந்து ஓட்டுநர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்க போலீசார் ராகேஷை கைது செய்தனர். இவர் வேளாண் அதிகாரியாக உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.