News April 3, 2025
ஸ்ட்ரெஸ்ஸில் உள்ளீர்களா இங்கே செல்லுங்கள்

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், திருவண்ணாமலை வல்லாள கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பொழுது முருகப்பெருமான் (கம்பத்தில்) தூணில் காட்சியளித்து காப்பாற்றினார். ‘முத்தைத் திரு பத்தித் திருநகை’ எனத் தொடங்கும் பாடலை அருணகிரிநாதர் அப்போது பாடினார். எனவே மன அமைதி இல்லாதவர்கள் கம்பத்து இளையனாரை வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 18, 2025
தி.மலை:பால் பண்ணை அமைக்க ரூ.1.67 லட்சம்!

1) தி.மலை மக்களே., மத்திய அரசின் DEDS திட்டத்தின் மூலம் பால் பண்ணை தொடங்க மானியத்துடன் ரூ.1.67 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. 2) பால் பண்ணை, பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்டவைக்கு மானியம் வழங்கப்படும். 3)கடனை திரும்பச் செலுத்த 6 மாதம் – 3 ஆண்டுகள் வரை சலுகை காலம் சில இடங்களில் உண்டு. 4) இதற்கு விண்ணப்பிக்க நபார்டு வங்கி, கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளை அணுகவும். (SHARE)
News December 18, 2025
தி.மலை: உதவித்தொகை குறித்து ஆட்சியர் அறிவித்தார்!

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளைத் தொடர முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. (Counseling) தேர்வாகி, ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்கும் மாணவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். தேவையான சான்றிதழ்களுடன் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
தி.மலை இளைஞர்களே MISS பண்ணிடாதீங்க!

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை டிச-19 காலை 10 மணி முதல் 3 மணி வரை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் அதிகமான பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன. 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ முடித்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதில் பங்குபெற்று பயன்பெறலாம். விவரங்களுக்கு-9629022086 ஷேர்.


