News April 3, 2025

ஸ்ட்ரெஸ்ஸில் உள்ளீர்களா இங்கே செல்லுங்கள்

image

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், திருவண்ணாமலை வல்லாள கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பொழுது முருகப்பெருமான் (கம்பத்தில்) தூணில் காட்சியளித்து காப்பாற்றினார். ‘முத்தைத் திரு பத்தித் திருநகை’ எனத் தொடங்கும் பாடலை அருணகிரிநாதர் அப்போது பாடினார். எனவே மன அமைதி இல்லாதவர்கள் கம்பத்து இளையனாரை வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 25, 2025

தி.மலை: டிராக்டர் மோதி வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலி

image

சேத்துப்பட்டு அடுத்தகூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்(26). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வீடுகளுக்கு டிஷ் பொருத்தும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வேலை முடிந்து வீடு திருமும்போது எதிர்பாராத விதமாக அவர் சென்ற பைக் மீது டிராக்டர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜய் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பல கனவுகளோடு வாழ்ந்தவரின் உயிர் நொடி பொழுதில் பிரிந்தது.

News November 25, 2025

தி.மலையில் கிடுகிடு உயர்வு…!

image

தி.மலை மாவட்டம் வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில்காய்கறிகள் விலை உயர்வு மற்றும் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டதால் இ்ல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் பூண்டு கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. சில்லரை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News November 25, 2025

திருவண்ணாமலை: பஞ்ச மூர்த்திகள் மாடவீதி உலா

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று அதிகாலை வெகு விமர்சையாக கொடியேற்றப்பட்டது. அதை தொடர்ந்து காலை முதல் நாள் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி விமானங்களில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இரவு பஞ்ச மூர்த்திகள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!